கப்பல் மூலம் கண்டெய்னரில் பணம் கடத்தல்.... வெளிநாட்டு நெட்வொர்க் மூலம் தினகரன் "அசத்தல்"!
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் கண்டெய்னர்களில் பணம் கடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்ன பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன் குறித்து பல்வேறு ரகசியங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக கட்சி இரண்டாக பிளவு பட்டது. இதனால் எழுந்த சர்ச்சையால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதனை மீண்டும் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் டெல்லி போலீசார் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திஹார் சிறை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு முக்கியமான நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொருவராக சிறைக்கு செல்வதால், அடுத்து என்ன நடக்குமோ என, மன்னார்குடி கோஷ்டியினர் அச்சத்தில் உள்ளனர்.

சர்வதேச நெட்வொர்க்
தினகரன், 1991 முதல் 98 வரை 8 ஆண்டுகள் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் வாழ்ந்தார். வெளிநாட்டு குடிமகனான அவருக்கு சர்வ தேச அளவில் நெட்வொர்க் அதிகமாம். அந்த நெட்வொர்க்களை பயன்படுத்தி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார் தினகரன்.

பணம் கடத்தல்
தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா உதவியுடன், கடல் வழியாக பல கோடி ரூபாயை கண்டெய்னர்களில் வெளிநாட்டிற்கு கடத்தியதாக தற்போது ரகசிய தகவல் அம்பலமாகியுள்ளது. அது பற்றியும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஹவாலா
சென்னையில் நடைபெற்ற ஐந்து நாள் விசாரணையில் பல்வேறு ரகசிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்போதுதான் ஹவாலா ஏஜென்ட் மூலம், தரகர் சுகேஷ் சந்திராவுக்கு பணம் கொடுத்ததை தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆடிட்டர் விசாரணை?
தினகரன் பெயரில் சென்னை 5 எஸ்பிஐ வங்கி கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், தினகரனின் ஆடிட்டரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications