மோடியை முஸ்லிம்கள் கை விட்டு விட வேண்டாம்: சிவசேனா
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை முஸ்லிம்கள் கைவிட்டு விட வேண்டாம் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிக்கையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், முஸ்லிம் சமுதாயத்தினரின் தேசப்பற்று மற்றும் நாட்டின் மீது கொண்டிருக்கும் அன்பு ஆகியவற்றை குறித்து பேட்டி ஒன்றில் உயர்வாக பேசிய நரேந்திர மோடியை முஸ்லிம் சமுதாயத்தினர் கை விட்டு விட கூடாது என தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், இந்துத்துவா கொள்கையில் இருந்து அவர் நீர்த்து போய் விட்டதாக பொருள் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பில்லை
மேலும் நாடு, அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு நரேந்திர மோடி பிரதமர். ஆனால், அவர் மீது முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற வர்ணம் பூசப்பட்டுள்ளது. சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அதற்கு பொறுப்பாக முடியாது என்றும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்தாக்கரே போல..
சிவசேனாவின் நிறுவனரான மறைந்த பால் தாக்கரே கடுமையான ஆனால் நல்ல இந்துத்வா கொள்கையில் ஈடுபட்டிருந்ததை அது நினைவுபடுத்தி உள்ளது.

எதற்கு எதிர்ப்பு
பால் தாக்கரே, தான் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை எப்பொழுதும் கூறியவர். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை கொண்டாடியவர்களை தான் அவர் எப்பொழுதும் எதிர்த்தார். அத்தகைய முஸ்லிம்களை தான் அவர் துரோகிகள் என கூறினார்.

சந்தேகப்பட முடியாது
இல்லையெனில், நாட்டின் முஸ்லிம்கள் மீது அவர் உயரிய மரியாதை வைத்திருந்தார். இந்திய முஸ்லிம்கள் தங்களது நாட்டிற்காக வாழ்ந்து, தங்கள் நாட்டிற்காக மறைபவர்கள். அவர்கள் அல்-கொய்தா போன்ற தீவிரவாத குழுக்களுக்கு துணை போக மாட்டார்கள். எனவே, அவர்களது தேசத்தின் மீதான நம்பிக்கை மீது சந்தேகப்பட முடியாது என்று மோடி தெரிவித்துள்ளதையும் தலையங்கம் சுட்டி காட்டியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications