For Quick Alerts
For Daily Alerts
Just In
ஊழல் தடுப்பு மசோதாக்களுக்கு அவசர சட்டம்- ஒப்புதல் தரவேண்டாம்: ஜனாதிபதிக்கு சி.பி.எம். கடிதம்
டெல்லி: ஊழல் தடுப்பு மசோதாக்கள் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரில் ஊழல் தடுப்பு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அவை தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து ஊழல் தடுப்பு மசோதாக்களை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்தது.
இதற்காக மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments
English summary
The CPM on Sunday urged President Pranab Mukherjee not to approve a clutch of bills which it said the cabinet might turn into ordinances for politically vested reasons.
Story first published: Sunday, March 2, 2014, 16:12 [IST]