தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய ஒடிஷா திராவிட ஆதி குடிகள்-வேதாந்தாவை ஓடவிட்டவர்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வீரமரணடைந்த போராளிகளுக்கு ஒடிஷா ஆதி குடிகள் வீரவணக்கம் செலுத்தி உள்ளனர்.
Recommended Video

லாஞ்சிகர்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 13 போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியிருக்கின்றனர் ஒடிஷாவின் திராவிடர் இனப் பழங்குடிகளான டோங்கிரியாக்கள்...இவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் பாக்சைட் ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகாலம் வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தியவர்கள்தான் இந்த திராவிடர் இன பழங்குடிகள்.
டோங்கிரியா கோண்டுகள்.. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த குயி மொழி பேசுகிற மக்கள். ஒடிஷாவின் கலஹாண்டி, ராயகடா மாவட்டங்களில் விரிந்து கிடக்கிறது நியாம்கிரி மலை.

டோங்கிரியா கோண்ட் திராவிடப் பழங்குடிகளின் தாயக பிரதேசம். பாக்சைட் தாது வளம் உள்ளது இந்த மலைப் பகுதி. இதனால் பாக்சைட் தாது வெட்டி எடுத்து அலுமினிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் பாக்சைட் தாது சுரங்கங்களை அமைப்பதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மலைகளில் இருந்து தாங்கள் அகதிகளாக, வேதாந்தா குழுமம் கட்டிக் கொண்டுக்கும் லைன் வீடுகளில் அடைக்கப்படுகிறோம்... இனத்தின் எதிர்காலமே பாக்சைட் சுரங்கங்களில் புதைக்கப்படுகிறோம் என உணர்ந்து வீறு கொண்டு எழுந்தனர். 17 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் திரள் மற்றும் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர் டோங்கிரியா கோண்ட் மக்கள்.
உச்சநீதிமன்றம் தலையிட்டு டோங்கிரியா இன மக்களின் கிராமசபைகளின் முடிவே இறுதியானது என உத்தரவிட்டு வேதாந்தாவின் லாஞ்சிகர் அலுமினிய சுத்தகரிப்பு ஆலையை இழுத்து மூட வைத்தது. ஆனாலும் ருசி கண்ட பூனை வேதாந்தா குழுமமோ, எப்போது வேண்டுமானாலும் அலுமினிய சுத்தகரிப்பு தொழிற்சாலையை திறந்துவிடும் என்கிற பெரும் பீதியில்தான் இந்த மக்கள் இன்னமும் அச்சத்துடன் இருக்கின்றனர்.

இந்த மக்களின் போராட்டத்தை 'அவதார்' திரைப்படத்தை ஒப்பிட்டு ஆய்வாளர்கள் எழுதியிருக்கின்றனர். இம் மக்கள்தான் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூடக் கோரி நடத்திய போராட்டத்தில் போலீசார் படுகொலை செய்த 13 தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி சுவரொட்டிகளை நியாம்கிரி மலைப் பகுதிகளில் ஒட்டியிருக்கின்றனர்.
அத்துடன் வேதாந்தா எப்போதும் இங்கே மீண்டும் வந்துவிடக் கூடாது என முன்னைவிட ஆக்ரோஷத்துடன் களம் காணவும் தயாராகிவிட்டனர். வேதாந்தாவை இந்தியாவை விட்டு வெளியேற வலியுறுத்தி ஜூன் 5-ந் தேதியன்று லாஞ்சிகரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மிகப் பிரமாண்ட பேரணியையும் டோங்கிரியா இன மக்கள் நடத்தியுள்ளனர்.
இப்போது லாஞ்சிகரும் தகிக்கிறது!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications