Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ஒரு வாரத்தில் 2ஆவது சம்பவம்

Subscribe to Oneindia Tamil

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

அந்தமான் நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 151 கி.மீ. தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது.

Earthquake of Magnitude 5.2 jolts at Andaman and Nicobar Islands

நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ பொருட் சேதமோ ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது போல் கடந்த மாதம் 9ஆம் தேதியும் இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. இதன் எதிரொலியாக அந்தமானில் 5.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Earthquake of Magnitude 5.2 jolts at Andaman and Nicobar Islands

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து பெர்கா என்ற இடத்திற்கு 123 கி.மீ. தொலைவில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவானது. இதனால் உயிர் இழப்புகள் பதிவாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+