Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத்துறையினர் மண்டையை உடைப்பீங்களா? அரசியல் சாசன நடவடிக்கை பாயும்-மமதாவுக்கு ஆளுநர் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிரான அரசியல் சாசன நடவடிக்கைகள் பாயும் என அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மாநில அமைச்சர் ஜோதி பிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பாக சென்றனர்.

ED officials attack: West Bengal governor CV Ananda Bose warns Mamata Govt.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனம் தாக்கப்பட்டது. அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இத்தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர் படுகாயமடைந்தனர். சிலருக்கு மண்டையும் உடைந்தது.

இந்த வன்முறை சம்பவத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் கடும் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவாது: இது மிக மோசமான தாக்குதல் சம்பவம். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை ஜனநாயகத்தை சூறையாடக் கூடிய தாக்குதல்களை தடுக்க வேண்டியது ஒரு நாகரிகமான அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் தமது அடிப்படை கடமையை கூட செய்யாமல் இருந்தால் அரசியல் சாசனத்தின் நடவடிக்கை பாயத்தான் செய்யும். அரசியல் சாசனத்தின் படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம். இவ்வாறு ஆளுநர் ஆனந்த போஸ் எச்சரித்தார்.

ED officials attack: West Bengal governor CV Ananda Bose warns Mamata Govt.

அமலாக்கத்துறையினர் மீதான தாக்குதலுக்கு மேற்கு வங்க காங்கிரஸும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான குண்டர்களின் தாக்குதல் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்; நாளை அவர்கள் கொல்லப்படலாம். இத்தகைய தாக்குதல்கள் அதிர்ச்சியை அளிக்கவில்லை. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+