உங்களுக்குத் தேவை சட்டப்பிரிவு 370 நீக்கமா? இந்தியாவுடன் காஷ்மீர் நீடிப்பதா?: ஒமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: மத்திய அரசுக்குத் தேவையானது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கமா? அல்லது ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து ஒருங்கிணைந்த பகுதியாக நீடிக்க வேண்டும் என்பதா? என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, சட்டப்பிரிவு 370 உண்மையிலேயே காஷ்மீருக்கு பலன் தருகிறதா என பார்க்கவேண்டும். எனவே, இந்தச் சட்டப் பிரிவு குறித்து நான் திறந்த மனதோடு விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்று நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்குவோம் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. அப்போதே இதற்கு ஜம்மு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.
இதற்கு தமது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.
அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்து:
பிரதமர் அலுவலக புதிய இணை அமைச்சர், சட்டப் பிரிவு 370 ஐ நீக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். அட... இது மிகவும் விரைவான தொடக்கம்தான். யார் இது குறித்து பேசுகிறார் என உறுதியாகச் சொல்ல முடியாது.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Art 370 is the ONLY constitutional link between J&K & rest of India. Talk of revocation of not just ill informed it's irresponsible. 3/3</p>— Omar Abdullah (@abdullah_omar) <a href="https://twitter.com/abdullah_omar/statuses/471279710748413952">May 27, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>எனது வார்த்தைகளை குறித்து கொள்ளுங்கள். இந்த ட்விட்டர் வார்த்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கவேண்டாமா அல்லது சட்டப்பிரிவு 370 நிலைத்து இருக்க வேண்டுமா என்ற வார்த்தைகளை நீண்ட நாள் கழித்து நினைவுபடுத்திப் பாருங்கள்.
ஜம்மு காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் சட்டரீதியான பிணைப்பினைத் தரும் ஒரே சட்டம், பிரிவு 370தான். இதனை நீக்கப் போவதாகக் கூறுவது பொறுப்பற்ற செயல்
இவ்வாறு ஒமர் அப்துல்லா தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதேபோல் ஜம்மு காஷ்மீரின் மக்கள் மாநாட்டு கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications