இமாச்சல பிரதேசத்தில் நவ.9ல் சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்றுதலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இன்ற அறிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு நிறைவடைய உள்ள நிலையில் சட்டசபை தேர்தல் தேதியை இன்று மத்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

டெல்லியில் மாலை நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அக்.16, மனுதாக்கல் தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள், அக்.23. வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள் அக்.24. வேட்பு மனு திரும்பப்பெற கடைசி நாள் அக்.26.
தேர்தலையொட்டி இமாச்சல பிரதேசத்தில், 7521 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஜனவரியில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள குஜராத்துக்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளோம்.
குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாநில காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்
இமாச்சலப் பிரதேசத்தில் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.28 லட்சம் செலவு செய்யலாம். குஜராத், இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து ஊழியர்களும் பெண்களாக பணியாற்றும் வாக்குச்சாவடிகளும் இருக்கும் இமாச்சல் பிரதேசத்தில் 136 வாக்குச்சாவடிகளிலும் பெண்கள் பணியாற்றும் வகையில் அமைக்கப்படும்
தேர்தல் ஆலோசனைகள் பெற சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படும்; வேட்பு மனுதாக்கல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications