டெல்லி மதக்கலவரத்துக்கு பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் குமார் வைத் காரணம்?
டெல்லி: கிழக்கு டெல்லியின் திரிலோக்புரியில் கடந்த 5 நாட்களாக நீடித்து வரும் வன்முறைக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுனில்குமார் வைத்தான் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி நாளில் நள்ளிரவில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இதைக் கட்டுப்படுத்தினர். ஆனாலும் மறுநாள் காலையில் இது பெரும் வன்முறையாக வெடித்தது.
இரு பிரிவைச் சேர்ந்தவர்களும் கற்களை சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படையினர், இரு பிரிவினரிடையே அமைதி ஏற்படுத்த முயன்றனர்.

அப்போது நடைபெற்ற மோதலில் 20 போலீஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதலின்போது, அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வன்முறை கடந்த 4 நாட்களாக நீடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்று ஆளில்லா விமானங்களில் கேமராக்களை பொருத்தி பாதுகாப்புப் படையினர் கண்காணித்தனர்.
இதில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வீடுகளில் சோதனை நடத்தி, மோதலின்போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கௌரவ், ராகேஷ், பல்ராஜ் குமார், திலக் ராஜ், முகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மோதல் மூண்ட இடங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நேற்று 3 மணி நேரம் தளர்த்தப்பட்டது. இதனிடையே இந்த மோதலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுனில்குமார் வைத் காரணம் என்று கூறப்படுவது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலுக்கு முன்பா சுனில்குமார் வைத் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்தே வன்முறை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் சுனில்குமார் வைத்யா, அரசியல் ஆதாயத்துக்காக இந்த மோதலை தூண்டிவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த சுனில்குமார் வைத், கடந்த சட்டசபை தேர்தலில் திரிலோக்புரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications