சர்தார் படேல் சிலைக்கு பேனா, பொம்மை துப்பாக்கி மாலை.... குஜராத் மாஜி போலீஸ் அதிகாரியால் சர்ச்சை
சூரத்: குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பேனா மற்றும் பொம்மை துப்பாக்கியால் ஆன மாலையை போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா அணிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இஷ்ரத் ஜஹான், சோராபுதீன் ஷேக், துள்சி பிரஜாபாதி போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் 2007-ம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டவர் வன்சாரா. இந்த போலி என்கவுண்ட்டர் நடத்தப்பட்ட போது, குஜராத் போலீஸின் குற்றப் பிரிவில் துணை ஆணையராக இருந்தவர் வன்சாரா.

துப்பாக்கி மாலை
கடந்த 2015-ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் வன்சாரா. அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அண்மையில் தளர்த்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் வன்சாரா. இந்த பயணத்தின் போதுதான் சூரத்தில் சர்தார் படேல் சிலைக்கு பேனாக்கள் மற்றும் பொம்மை துப்பாக்கியால் ஆன மாலையை அவர் அணிவித்தார்.

இதுக்குதான் மாலை....
இது குறித்து வன்சாரா கூறுகையில், நாடு விடுதலை அடைந்த போது 665 சமஸ்தானங்களாக இருந்தது இந்தியா. இவை அனைத்தும் தமது பேனா முனையால் போட்ட உத்தரவுகளால் ராணுவ பலத்தால் இணைத்து இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் படேல். ஆகையால் பேனா மற்றும் பொம்மை துப்பாக்கிகளால் சர்தார் படேல் சிலைக்கு மாலை அணிவித்தேன் என்றார்.

படேல்கள் எதிர்ப்பு
ஆனால் வன்சாராவின் இந்த செயலுக்கு படேல் சமூகத்தினரும் காங்கிரஸ் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். படேல் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் வன்சாரா செயல்பட்டு வருகிறார்; சர்தார் படேல் ஒருபோதும் வன்முறையை விரும்பியல்லை; அவர் சமாதானத்தை நேசித்தவர் என கூறி வன்சாரா அணிவித்த பேனா, பொம்மை துப்பாக்கி மாலையை அகற்றியுள்ளனர்.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
மேலும் இடஒதுக்கீடு கோரி போராடி வரும் படேல் சமூகத் தலைவர்களில் ஒருவரான நிஹில் சவானி, சர்தார் படேலை வன்சாரா அவமதித்துவிட்டார். எங்களது சமூகத்தின் உணர்வுகளையும் அவர் காயப்படுத்திவிட்டார். இந்த செயலுக்காக வன்சாரா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியும் வன்சாரா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications