சர்தார் படேல் சிலைக்கு பேனா, பொம்மை துப்பாக்கி மாலை.... குஜராத் மாஜி போலீஸ் அதிகாரியால் சர்ச்சை
சூரத்: குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பேனா மற்றும் பொம்மை துப்பாக்கியால் ஆன மாலையை போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா அணிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இஷ்ரத் ஜஹான், சோராபுதீன் ஷேக், துள்சி பிரஜாபாதி போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் 2007-ம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டவர் வன்சாரா. இந்த போலி என்கவுண்ட்டர் நடத்தப்பட்ட போது, குஜராத் போலீஸின் குற்றப் பிரிவில் துணை ஆணையராக இருந்தவர் வன்சாரா.

துப்பாக்கி மாலை
கடந்த 2015-ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் வன்சாரா. அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அண்மையில் தளர்த்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் வன்சாரா. இந்த பயணத்தின் போதுதான் சூரத்தில் சர்தார் படேல் சிலைக்கு பேனாக்கள் மற்றும் பொம்மை துப்பாக்கியால் ஆன மாலையை அவர் அணிவித்தார்.

இதுக்குதான் மாலை....
இது குறித்து வன்சாரா கூறுகையில், நாடு விடுதலை அடைந்த போது 665 சமஸ்தானங்களாக இருந்தது இந்தியா. இவை அனைத்தும் தமது பேனா முனையால் போட்ட உத்தரவுகளால் ராணுவ பலத்தால் இணைத்து இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் படேல். ஆகையால் பேனா மற்றும் பொம்மை துப்பாக்கிகளால் சர்தார் படேல் சிலைக்கு மாலை அணிவித்தேன் என்றார்.

படேல்கள் எதிர்ப்பு
ஆனால் வன்சாராவின் இந்த செயலுக்கு படேல் சமூகத்தினரும் காங்கிரஸ் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். படேல் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் வன்சாரா செயல்பட்டு வருகிறார்; சர்தார் படேல் ஒருபோதும் வன்முறையை விரும்பியல்லை; அவர் சமாதானத்தை நேசித்தவர் என கூறி வன்சாரா அணிவித்த பேனா, பொம்மை துப்பாக்கி மாலையை அகற்றியுள்ளனர்.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
மேலும் இடஒதுக்கீடு கோரி போராடி வரும் படேல் சமூகத் தலைவர்களில் ஒருவரான நிஹில் சவானி, சர்தார் படேலை வன்சாரா அவமதித்துவிட்டார். எங்களது சமூகத்தின் உணர்வுகளையும் அவர் காயப்படுத்திவிட்டார். இந்த செயலுக்காக வன்சாரா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியும் வன்சாரா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications