மாயாவதியை நாயுடன் ஒப்பிட்டு மீண்டும் தயாசங்கர் சிங் அநாகரிக விமர்சனம் #mayawati
லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியை மீண்டும் தரக்குறைவாக பேசிவிட்டு, பின்பு அதனை மறுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி எம்பி அம்மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில், அவரை ஒரு பெண் தலைவர் என்றும் பாராமல் மிக மோசமாகவும் ஆபாசமாகவும் மாநிலங்கள் அவையிலேயே உத்தரபிரதேசத்தின் பாஜக முன்னாள் தலைவர் தயாசங்கர் சிங்.

அவதூறு பேச்சு
உத்தர பிரதேச பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங் மாநிலங்களவையில் ‘‘சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாயாவதி ஒரு தொகுதிக்கான இடத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்கிறார். 2 கோடி ரூபாய் கொடுத்தால் சீட் அவருக்கு மாறிவிடும். மாலையில் யாராவது 3 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தால் முதலில் நியமிக்கப்பட்ட வேட்பாளரை நீக்கிவிட்டு, புதியவரை தேர்வு செய்கிறார். அவரது குணம் மிகவும் மோசமாக உள்ளது'' என ஆபாசமான வார்த்தைகளை சொல்லிச் பேசினார்.

எதிர்த்து குரல்
‘‘தரம்தாழ்ந்த வார்த்தையை பயன்படுத்திய தயாசங்கர் சிங்கை உடனடியாக கட்சியை விட்டு நீக்கி கைது செய்ய வேண்டும்'' என்று மாயாவதி மாநிலங்களவையிலேயே எதிர்த்து குரல் கொடுத்தார்.

தயாசிங் நீக்கம்
தயாசங்கர் சிங்கின் பேச்சு இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாகியது. உத்திரபிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் பதவியிலிருந்தும் மற்றும் 6 வருடங்கள் கட்சியில் இருந்தும் தயாசங்கர் சிங்கை நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. மேலும், அவரின் இந்தக் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

கைது
எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தயாசங்கர் சிங் மீது உ.பி., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 153ஏ, 504 மற்றும் 509 ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தயாசங்கர் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலையானார்.

மீண்டும் சர்ச்சை பேச்சு
இந்நிலையில், ஜாமீனில் வெளி வந்த தயாசங்கர் சிங், மைன்புரியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மீண்டும் மாயாவதியை தரக் குறைவாக பேசியுள்ளார். "மாயாவதி பேராசை பிடித்தவர். அவருடைய சகோதரர் மற்றும் அரசியல் ஆலோசகர் சதீஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சந்தேகத்திற்கிடமான முறையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். சந்துகளில் மோட்டார் சைக்கிள் வேகமாக சென்றால் அதை துரத்தும் நாய், மோட்டார் சைக்கிள் நின்று விட்டால் பின்வாங்கி விடுவது போல் மாயாவதியின் செயல்பாடு இருக்கிறது" என்று பேசியுள்ளார்.
தயாசங்கரின் இந்தப் பேச்சு மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், தான் அப்படி பேசவில்லை என்று மறுத்து தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications