டெல்லியில் மொட்டை அடித்துக் கொண்டு விவசாயிகள் போராட்டம்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் இன்று 8-ஆவது நாளாக போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் தலைமுடியை மொட்டை அடித்து கொண்டு இன்று 8-ஆவது நாளாக ஈடுபட்டனர்.
விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை அமைத்தல், நதிகளை இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமார் 41 நாள்கள் நடைபெற்ற நிலையில் மத்திய, மாநில அரசு பிரதிநதிகளின் கோரிக்கையை ஏற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், தங்களுக்கு வாக்களித்தபடி மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்ளாததால் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 16-ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனிதர்களை ஏரில் பூட்டி உழுதல், செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொள்ளுதல் என தினம் ஒரு போராட்டம் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று 8 வது நாள் போராட்டத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகள், விஷ பாட்டில்கள் ஆகியவற்றுடன் போராட்டத்தை தொடங்கினர்.
மேலும் ஒரு சில விவசாயிகள் இன்று மொட்டை அடித்துக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யாக்கண்ணுவின் மனைவிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் அய்யாக்கண்ணு இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். ஆனாலும், சங்க மாநில துணை தலைவர் கரூரை சேர்ந்த கிட்டப்பா ரெட்டி தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அய்யாக்கண்ணு கூறினார். அதன்படி டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications