ஆண் குழந்தையை திருப்பதியில் விட்டுச் சென்ற தந்தை... பாட்டியிடம் ஒப்படைத்த போலீஸ் : வீடியோ
மனைவி இறந்ததால், பெற்ற குழந்தையை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி: பெற்ற குழந்தையை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்பு விட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். தாய் வழிப்பாட்டியிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் அருள். இவருக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
Recommended Video

கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயந்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் ஒரு வயதான ஆண்குழந்தையை வளர்க்க சிரமப்பட்ட அருள், குழந்தையைக் கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் சென்றார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் குழந்தை அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை விட்டுச் சென்ற அருளை சிசிடிவி கேமிரா மூலம் அடையாளம் கண்டு தேடிவந்தனர்.
இந்நிலையில், குழந்தையின் தாய்வழிப் பாட்டி தக்க ஆவணங்களுடன் போலீசாரை அணுகி, குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். அதனையடுத்து குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், போலீசார் அருளைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications