கூடங்குளம்: ''அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதா?''- உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர ராஜன் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது, கூடங்குளம் அணு உலையில் உச்சநீதிமன்ற அறிவு றுத்தல் படி, 15 நிபந்தனைகளை நிறை வேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாகவும், எனவே உடனடியாக அணு உலையை மூடிவிட வேண்டும் என்றும் கூறினார்.

உடனே குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூளம் ஜி.வாகன்வதி, தற்போது அணு உலை யில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுளளது என்றும், எந்த பாதிப்பும் கிடையாது என்றும், எனவே இந்த மனுவை தேவையற்றது எனக்கருதி உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதி பதிகள், அணு உலையில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டுள்ளனவா? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள். பின்னர் வழக்கு விசாரணையை 17-ஆம் (திங்கட்கிழமை)தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்ற பரிந்துரைகளை பின்பற்றி கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 15 பரிந்துரைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications