13/7 மும்பை குண்டுவெடிப்புகள் நடத்த பணம் கொடுத்த மதீன் கோவா ஏர்போர்ட்டில் கைது
பனாஜி: 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பணம் கொடுத்த அப்துல் மதீன் தமாதா கோவா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி தீவிரவாதிகள் மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களை நடத்த கர்நாடக மாநிலம் பட்கலைச் சேர்ந்த அப்துல் மதீன் தமாதா(50) என்பவர் துபாயில் இருந்து ஹவாலா மூலம் ரூ.10 லட்சத்தை கன்வர் பத்ரிஜா என்பவருக்கு அனுப்பியுள்ளார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் டெல்லியில் கன்வர் பத்ரிஜாவை சந்தித்து பணத்தை வாங்கியுள்ளார்.
இந்த தாக்குதலை அடுத்து மதீன் மற்றும் அவரது உறவினர் உபைர், மைத்துனர் முசாபர் கோலா ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்த மதீனை மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோவா விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை மதீனை அவர்கள் கைது செய்தனர்.
உபைர் துபாயில் வசித்து வருகிறார். ஆனால் முசாபர் பட்கலில் உள்ளதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதீன் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6வது நபர் மதீன் ஆவார். முன்னதாக நகி அகமது, நதீம் ஷேக், கன்வர் பத்ரிஜா, ஹாரூன் நாயக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். யாசின் பட்கல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 2 குற்றவாளிகளான தெஹ்சீன் அக்தர், பாகிஸ்தானைச் சேர்ந்த வாகஸ் இப்ராஹிம் சாத் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வெடிகுண்டுகளை வினியோகித்த ரியாஸ் பட்கல் மற்றும் வாசிம் என்ற இப்ராஹிம் மட்டும் தான் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே மதீன் அனுப்பிய பணம் தீவிரவாத தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது அவருக்கு தெரியாது என அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications