ஜெய்ப்பூர் அடுக்குமாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!
ஜெய்ப்பூர் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அடுக்கு மாடி வணிக வளாகத்தில் திருமணத்துக்கான புல்வெளி திடல், மல்டிப்ளக்ஸ் சினிமா திரையரங்கு மற்றும் கேளிக்கை விடுதி ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இங்கு இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.
பல மணிநேரம் போராடிய அவர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேலும் திருமணத்திற்காக போடப்பட்டிருந்த செட் முழுவதும் இந்த தீ விபத்தில் நாசமானது. ஆனால் தீ திரையரங்கை நெருங்குவதற்குள் 90 நிமிட போராட்டத்துக்குப் பின் அணைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications