For Daily Alerts
Just In
ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 5 போலீசார் பலி; 6 பேர் படுகாயம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 5 போலீசார் பலியாயினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு என்ற வனப்பகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். இந்நிலையில் அந்த பகுதியில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் விதமாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 போலீசார் உயிரழந்தனர். மேலும் 6 போலீசார் காயமடைந்தனர்.
போலீசார் சென்ற வாகனங்களை கண்ணி வெடிகள் மூலம் தகர்ப்பதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருந்தனர் என்று ஜார்கண்ட் மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.
Comments
English summary
Five police personnel have been killed in a naxal attack at Palamu in Jharkhand. Six others have been injured.
Story first published: Wednesday, January 27, 2016, 23:37 [IST]