என்.எஸ்.ஜி விவகாரம்.... சீனாவுக்கு வெளியுறவுத் துறை செயலர் திடீர் பயணம்
டெல்லி: அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) உறுப்பினராவதற்கான ஆதரவை கோரி மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் திடீரென சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார்.
48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட என்.எஸ்.ஜியில் இந்தியா உறுப்பினராவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா பயணம் மேற்கொண்ட போது இதற்கான லாபி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவும் என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை உறுப்பினராக்குவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

சீனா கடும் எதிர்ப்பு
ஆனால் சீனா, துருக்கி ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் என்.எஸ்.ஜியில் உறுப்பினராக முடியாது என்கிறது சீனா. மேலும் சீனா அரசு ஊடகங்களோ இது பாகிஸ்தானை சீண்டும் செயல்; தெற்காசியாவின்சமநிலை பாதிக்கப்படும் என்றெல்லாம் எழுதி வருகின்றன.

சியோல் மாநாடு
இதனிடையே என்.எஸ்.ஜி. அமைப்பின் கூட்டம் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

சீனா பயணம்
இதனிடையே கடந்த 16,17 தேதிகளில் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் திடீரென சீனாவுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

உறுதி செய்த விகாஸ்
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் சீனா பயணம் மேற்கொண்டிருந்தார் என உறுதி செய்தார். ஜெய்சங்கரின் சீனா பயணம் கை கொடுக்குமா? என்பது 24-ந் தேதி தெரிந்துவிடும்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications