ஒடிசாவில் கோர விபத்து ...இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து...4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மயங்கி விழுந்த மேலும் 6 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், என் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன என்று கூறியுள்ளார்.

விஷவாயு கசிவு
ஒடிசா மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தின் ரூர்கேலா இரும்பு ஆலை (ஆர்எஸ்பி) உள்ளது. இன்று காலை அந்த ஆலையின் நிலக்கரி இரசாயனத் துறையில் மொத்தம் 10 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கார்பன் மோனாக்சைடு வாயு வெளியேற்றப்படுவதில் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த தொழிளார்கள் மயங்கி கீழே சரிந்தனர்.

4 தொழிலார்கள் உயிரிழப்பு
உடனடியாக அவர்கள் இஸ்பாட் பொது மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 4 பேரும் ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு உத்தரவு
விபத்து நேரிட்ட உடன் அனைத்து அவசர நெறிமுறைகளும் ஆலையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். தொழிலாளர்கள் இறப்புக்கு ஆர்.எஸ்.பி தலைமை நிர்வாக அதிகாரி தீபக் சத்ராஜ் இரங்கல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவியும் செய்வோம் என்று கூறிய அவர் விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.

நவீன் பட்நாயக் இரங்கல்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் ''ரூர்கேலா இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து 4 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். என் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்'' என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications