ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் காந்தி -ராஜாஜி பேரன் போட்டி?
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக காந்தி மற்றும் ராஜாஜியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
ஆனால் அவர்கள் இருவரிடமும் பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருவதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதேபோல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பனாமா ஆவண பட்டியலில் அமிதாப் பெயர் இடம் பெற்றதை அடுத்து அந்த எண்ணமும் கைவிடப்பட்டது.

ரஜினிகாந்த்
இந்நிலையில் எந்த சர்ச்சையிலும் சிக்காத, எதிர்க்கட்சிகளால் ஆதரிக்கக் கூடிய பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முடிவு செய்தது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டது. எனினும் அரசியலுக்கு வராமல் அவர் ஒதுங்கியே இருப்பதால் அந்த முயற்சியும் கைவிடப்படுவதாக தெரிகிறது.

பழங்குடியின பெண்
தற்போது பாஜக சார்பில் திரௌபதி முர்மு என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது ஆளுநராக இருக்கிறார். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி - ராஜாஜி பேரன்
இவர் மகாத்மா காந்தி - மூதறிஞர் ராஜாஜியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். படித்து 1968-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு துணை ஜனாதிபதியின் செயலாளராகவும், ஜனாதிபதியின் இணை செயலாளராகவும் பணியாற்றினார்.

மேற்கு வங்க முன்னாள் கவர்னர்
தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கவர்னராக பணிபுரிந்துள்ளார். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி மேற்கு வங்காள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு சென்னை கலாசேத்ரா பவுண்டேசன் சேர்மனாக நியமிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அந்த பொறுப்பில் இருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications