"செத்து போயிடுங்கள்.." பள்ளி கட்டணம் பற்றி புகாரளித்த பெற்றோருக்கு.. பாஜக அமைச்சரின் ஷாக் பதில்
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களைப் பார்த்து, "செத்துப் போய்விடுங்கள்" என பாஜக அமைச்சர் இந்தர் சிங் பர்மர் திட்டும் வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது.
இதனால் வேக்சின் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. தற்போது 18+ வேக்சின் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக தற்போது நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்படுகிறது. இருந்தாலும்கூட பல பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பலரும் புகார் அளித்துள்ளனர்.

பள்ளி கட்டணம்
பள்ளி கட்டணம் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் மாணவர்களிடம் டியூஷன் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் இதர கட்டணங்கள் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் மத்தியப் பிரதேசத்தில் பல பள்ளிகள் கூடுதலாகவே கட்டணம் வசூலிப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெற்றோர்கள் புகார்
இது தொடர்பாகப் புகார் அளிக்க அம்மாநிலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மரை பெற்றோர்கள் சந்தித்துள்ளனர். பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் நிலைமை இப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்வது, செத்து மடிய வேண்டுமே என்றும் சிலர் ஆவேசமாகக் கேட்டுள்ளனர்.

"செத்து போய்விடுங்கள்"
அதற்கு இந்தர் சிங் பர்மர், "செத்து போய்விடுங்கள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபடைந்த 80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள். அவரது அலுவலகத்திற்கு எதிரியிலேயே போராட்டம் நடத்தினர். பள்ளி கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களைப் பார்த்து, "செத்து போய்விடுங்கள்" என அமைச்சர் இந்தர் சிங் பர்மர் திட்டும் வீடியோ இப்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

விமர்சனம்
இதனை காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இது பற்றி மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் தனது ட்விட்டரில், " மத்தியப் பிரதேச முதல்வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் இஷ்டம் போல நடந்து கொள்கிறார்கள். பள்ளி கட்டணம் குறித்து புகார் அளித்த பெற்றோரை பார்த்துச் செத்துவிடுங்கள் என்கிறார். இவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் பதிலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பெற்றோர் கூட்டமைப்பும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications