எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது.

இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தின. அதில் காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
மேலும் அவரது பெயர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும் ஆளும் கட்சி தலித் வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை நிறுத்தியதால் அவருக்கு ஈடுகொடுக்க அதே பிரிவைச் சேர்ந்த மீராகுமாரை எதிர்க்கட்சிகள் நிறுத்தின.
இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications