முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்ததற்கு ஓய்வூதிய திட்டம் காரணமல்ல: அருண் ஜெட்லி
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், முன்னாள் ராணுவத்தினர் மீது அனுதாபப்படவில்லை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்ததற்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது காரணம் அல்ல என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து உயிரிழந்த ராணுவ வீரரின் சடலத்தை பார்க்கச் சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர அருண் ஜெட்லி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 10 ஆண்டு கால ஆட்சியில் முன்னாள் ராணுவத்தினர் மீது காங்கிரஸ் அனுதாபப்படவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியின் போது ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், ராம் கிஷன் தற்கொலைக்கு, ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது காரணம் அல்ல என்றும், வங்கி தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளியால் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications