ரூபாய் நோட்டுக்களுக்கு மட்டும்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கா? குழந்தைகளையும் பாருங்க! இப்படியும் ஒரு மனு
வருகிற 20 -ம் தேதி உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து குழந்தை திருமணங்களை தடுக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொல்கத்தா: கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு அதிரடியாக தடை விதித்தது போன்று குழந்தை திருமணக் கொடுமைகளை தடுக்கவும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருகிற 20 ஆம் தேதி உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குழந்தை திருமணத்தை தடுக்க சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என்று கொல்கத்தா மாநில அதிகாரிகளிடம் அங்குள்ள குழந்தைகள் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:
கருப்பு பணத்தை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையாக 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குழந்தை திருமண கொடுமைகளை தடுக்க மாநில அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சர்வதேச தொண்டு நிவுனத்தில் அங்கம் வகிக்கும் சைல்டு சேம்பியன் அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களில் ஒருவரான பைசகி பிஸ்வாஸ் கூறியதாவது:
எந்தக் குழந்தைக்கும் குறைந்த வயதில் திருமணம் நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தது போன்று குழந்தை திருமணங்களை தடுக்கவும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்த வேண்டும்.
எனக்கு 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டதால் இரண்டு வருடங்களில் தாயாக ஆனேன். முன்கூட்டியே திருமணம் செய்ததால் பள்ளிப் படிப்பை 9-ஆம் வகுப்பிற்கு பின்னர் விட வேண்டிய கட்டாயம் எழுந்தது.
எனவே, பிற குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தை திருமணத்தை தடுக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளேன் என்றார் அவர். சமூகத்தில் பின்தங்கிய மக்கள் இன்னும் குழந்தை திருமணத்தை நடத்தி வரும் அவலம் நீட்டித்து வருகிறது. எனவே, குழந்தை திருமண கொடுமையை தடுக்கும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது.
ஆண்டு தோறும் குழந்தை உரிமை மாநாடு வாரம் நவம்பர் 14-முதல் 20 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் குழந்தை நல அமைப்பினர் குழந்தை திருமணத்தை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த இடத்தை உருவாக்கித் தர உறுதி எடுக்கும் விதமாக குழந்தை உரிமை வாரம் பின்பற்றப்படுகிறது. ஐ.நா.குழந்தை உரிமை பாதுகாப்பு அமைப்பினர் குழந்தைகளை பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
உலக குழந்தைகள் தினம் வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க சமூகம் தங்களது பெரும் பங்களிப்பினை அளித்து அவர்களுக்கான பாதுகாப்பு வலையத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தை பாதுகாப்புக்காக கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள் இந்தியாவில் போராடி வருகின்றன.
இந்நிலையிலும் 10 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகள் 5 வயது வரை வாழ்வாதாரத்துக்காக போராடி வருவதாகவும், 8 கோடியே 40 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வருவதாகவும், 70 லட்சத்து 8 ஆயிரம் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா நேரு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் குழந்தைகள் அன்றாடம் எதிர் கொண்டு வரும் பிரச்னைகள், பல பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடூரங்கள் குறித்த ஆவணப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications