ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்த ஆய்வு குழு... ஆளுநருக்கு கிடைக்கிறதா கூடுதல் அதிகாரங்கள்?
டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த ஆளுநர்கள் குழு தங்களின் அதிகாரம் மற்றும் பணி தொடர்பான பங்களிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது
Recommended Video

டெல்லி: சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்களிப்பு என்ன? என்பது குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் ஆளுநர்கள் குழு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 48-வது ஆளுநர்கள் மாநாட்டில், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாநில ஆளுநர்களின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்ய கவர்னர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஆளுநர்களின் அதிகார மாற்றம், செய்யப்படவேண்டிய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்தது.

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர்.
மாநில அரசுகளை வழிநடத்துவது, திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவைகளில் ஆளுநரின் பங்குகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை அரசு விழாக்களில் மட்டும் தலைக்காட்டும் ஆளுநர்களின் அதிகாரம் வரம்பு உயர்த்தப்பட்டு, களப்பணியிலும், அரசு பணியிலும் ஆளுநர்களின் பங்களிப்பு இருக்கும் விதமாக மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்லி, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுடன் மோதல் போக்கை ஆளுநர்கள் கடைப்பிடித்து வரும் நிலையில், ஆளுநர்களின் இந்த அறிக்கை மேலும் பரபரப்பை கிளம்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications