பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களின் தலைவர்களையும் நீக்குகிறது மோடி சர்க்கார்!
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழு துணைத் தலைவர்கள் நீக்கத்தைத் தொடர்ந்து பெண்கள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் நியமனங்களையும் மோடி அரசு நீக்க இருக்கிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஏற்றவுடன் மாநில ஆளுநர்கள் பலரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறது. சில மாநில ஆளுநர்கள் இதனை ஏற்க மறுத்துவருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஜோஷி, சத்தீஸ்கர் மாநிலத்தின் சேகர் தத் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆளுநர்கள் பிடிவாதம்
அதே நேரத்தில் கேரளாவின் ஷீலா தீட்சித், கர்நாடகாவின் பரத்வாஜ், அஸ்ஸாமின் ஜே.பி. பட்நாயக் ஆகியோர் பதவி விலக மறுத்து வருகின்றனர். ஜனாதிபதி கேட்டுக் கொண்டால் பரத்வாஜ், ஜே.பி.பட்நாயக் ராஜினாமா செய்ய வாய்ப்பிருக்கிறது.ஆனால் ஷீலா தீட்சித் பிடிவாதம் காட்டுவார் என்பதால் யூனியன் பிரதேசம் ஒன்றுக்கு அவர் ஆளுநராக மாற்றப்படலாம்.
ரோசையா ராஜினாமா?
தமிழக ஆளுநர் ரோசையா தாமே முன்வந்து ராஜினாமா செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
பேரிடர் குழுவில் அதிரடி
இப்படி ஆளுநர்கள் நீக்கம் என்கிற பரபரப்பு அடங்குவதற்குள் பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் உட்பட உறுப்பினர்கள் 7 பேரையும் ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
ராஜினாமாக்கள்
பிரதமர் தலைமையிலான இந்த தேசிய பேரிடர் குழுவின் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் சசிதர் ரெட்டி, உறுப்பினர்களாக கே.எம்.சிங், ஜே.கே.சின்ஹா, சலீம் அலி, கே. குப்தா, பட்டச்சர்ஜி, முசாஃபர் அகமது, ஜே.கே. பன்சால், கே.என். ஸ்ரீவத்சவா ஆகியோர் இருக்கின்றனர். பேரிடக் குழுவின் துணைத் தலைவர் பதவி என்பது இணை அமைச்சருக்கு இணையானது.
இவர்களில் சசிதர் ரெட்டி உட்பட 5 பேர் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதர உறுப்பினர்களும் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து விடுவர் என்று கூறப்படுகிறது.
ஆணையங்களும் கலைப்பு
இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் தேசிய ஆணையம், சிறூபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் ஆணையம் ஆகியவையும் மறுசீரமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவராக மமதா சர்மா, இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் தலைவராக கரன்சிங், தாழ்த்தப்பட்டோர் கமிஷன் தலைவராக புனியா ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் மூவருமே காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர்கள். தற்போது இவர்களையும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல பல கமிட்டிகளின் தலைவர்களையும் நீக்குவது என்று மோடி அரசு முடிவு செய்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications