குஜராத் காங்கிரஸ் கட்சி, விரைவில் பாஜகவில் இணையும்.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
காந்தி நகர்: வரும் சட்டமன்றத் தேர்தலோடு குஜராத் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் இணைந்துவிடும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் டெல்லி, ஆம் ஆத்மி ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் மாநில தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியமைக்க பணியாற்றி வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அதற்கான பணிகளை தொடங்கியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடுமையாக சாடி வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு
டெல்லியில் சில ஆண்டுகளில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். இதுபோன்று குஜராத் இளைஞர்களுக்கும் வேலை வழங்குவோம். அது நடக்கும் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆனால் ஊழல் செய்வது மட்டுமே பாஜகவின் செயல்பாடாக உள்ளது.

கள்ளச்சாராயம்
அதுமட்டுமல்லாமல் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு கிராமத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விற்பனை செய்பவர்கள் கோடீஸ்வர்ரகளாக இருக்கிறார்கள். மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்தால், அடுத்த தலைமுறையினரும் கள்ளச்சாராயத்திற்கு அடிமையாவார்கள்.

காங்கிரஸ்
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கக் கூடாது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு பலரும் செல்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு பின், காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக பாஜகவுக்கு சென்றுவிடுவர். இந்த தேர்தலில், குஜராத் காங்கிரஸ், குஜராத் பாஜகவுடன் இணையப் போகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி-யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. எங்களின் முதல் வாக்குறுதி மின்சாரம் வழங்குவது. இங்கு அதிக மின்சார கட்டணத்தால், மக்கள் துயரத்தில் இருக்கின்றனர்.
இங்கும் இலவசக் கல்வி, சுகாதாரம், மின்சாரம் வழங்கலாமா என்று மக்களிடம் கேட்டேன். 99 சதவிகிதம் மக்கள், இலவச கல்வி வேண்டும் என்று கூறி இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications