For Daily Alerts
Just In
3-ம் கட்ட லோக்சபா தேர்தலில் மிக அதிகபட்ச வாக்குகள் பதிவாகி சாதனை!!
டெல்லி: 3வது கட்ட லோக்சபா தேர்தலின் போது 91 தொகுதிகளிலும் மிக அதிபட்சமாக வாக்குகள் பதிவாகி இருந்தன. லட்சத்தீவுகளில் மிக அதிகபட்சமாக 80%, சத்தீஸ்கரின் பஸ்தாரில் மிக குறைந்தபட்சமாக 51.5% வாக்குகள் பதிவாகின.
லோக்சபா தேர்தலின் 3வது கட்டமாக மொத்தம் 14 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. டெல்லியில் 64.77% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலைவிட இது 12% அதிகமாகும்.
ஜம்மு காஷ்மீரில் 66% வாக்குகள் பதிவாகி இருந்தன. இங்கு கடந்த 2009ஆம் ஆண்டு 47% வாக்குகள்தான் பதிவாகி இருந்தன.
இதேபோல் 2009ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 51.2% வாக்குகள் பதிவாகி இருந்தன. இம்முறை 60% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒடிஷாவில் 70% வாக்குகள் பதிவாகின.
English summary
The third phase of polling in 91 Lok Sabha constituencies spread over 14 States and Union Territories on Thursday registered a record turnout, ranging from 80 per cent in Lakshadweep to 51.49 per cent in Naxal-dominated Bastar district of Chhattisgarh.
Story first published: Friday, April 11, 2014, 8:53 [IST]