சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இன்று 412 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களைக் கொணது. இந்த 68 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் 55,74,793 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தேர்தல் களத்தில் 412 வேட்பாளர்கள் மோதுகின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும்.
Nov 12, 2022, 6:27 pm IST
இமாச்சல பிரதேசத்தில் மாலை 5 மணி வரை 65.92% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தகவல்.
Nov 12, 2022, 6:24 pm IST
இமாச்சல பிரதேசத்தில் மாற்றம் ஏற்படுவது உறுதி. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடிக்கும். பாஜகவுக்கு படுதோல்வி நிச்சயம்- காங்கிரஸின் ஆனந்த் சர்மா நம்பிக்கை
Nov 12, 2022, 5:24 pm IST
இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் தேர்தல் அதிகாரிகள்!
Nov 12, 2022, 5:03 pm IST
இமாச்சல பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
Nov 12, 2022, 4:57 pm IST
இந்த தேர்தலுக்கு பின்னரும், இமாச்சல பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூரே தொடர்ந்து இருப்பார் என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்து உள்ளார்.
Nov 12, 2022, 4:35 pm IST
இமாச்சலப் பிரதேசம் தாஷிகாங்கில் உள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியில் 52 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 51 பேர் வாக்களித்துள்ளனர்.
Nov 12, 2022, 4:22 pm IST
இமாச்சல பிரதேச தேர்தலில் மதியம் 3 மணி வரை 55% வாக்குகள் பதிவாகி உள்ளது.
Nov 12, 2022, 4:14 pm IST
இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் காங்கிரஸ் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்
Nov 12, 2022, 3:57 pm IST
குழந்தைகளுடன் வரும் பெற்றோர் வாக்களிக்கவும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
Nov 12, 2022, 3:41 pm IST
இமாச்சலப் பிரதேசத்தில் 157 வாக்குச் சாவடிகள் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகின்றன- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
Nov 12, 2022, 3:27 pm IST
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் 14 கிமீ நடந்து வந்து ஜனநாயக கடமையாற்றிய 83 வயது பெண்.
Nov 12, 2022, 3:16 pm IST
சிம்லா அருகே உள்ள தாண்டீர் வாடி தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
Himachal Pradesh | Naro Devi, a 105-year-old voter cast her vote in the Churah Assembly constituency for the #AssemblyPolls2022; visuals from polling station 122 pic.twitter.com/9PnJZUmg01
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வாக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
Nov 12, 2022, 1:25 pm IST
11 மணி நிலவரப்படி டூன் சட்டசபை தொகுதியில் குறைந்தபட்சமாக 7 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது
Nov 12, 2022, 1:08 pm IST
சம்பா மாவட்டம் பாங்கி தாலுகாவில் உள்ள சாசக் படோரி வாக்குச்சாவடிக்கு பனிபடர்ந்த பாதையை கடந்து ஓட்டுப்போட மக்கள் படையெடுத்து சென்றனர். இமாச்சல பிரதேசத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Nov 12, 2022, 12:52 pm IST
இமாச்சல பிரதேச மொத்த வாக்காளர்களில் 1.20 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். நான் அவர்களை தலை வணங்குகிறேன். அவர்களிடம் இருந்து உத்வேகத்தை பெறுவதன் மூலம் இளைஞர்கள் முன்னேற்றம் அடையலாம். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான மறைந்த ஷியாம் சரண் நேகிக்கு நாம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கு அனைவரும் தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் பேட்டி
Nov 12, 2022, 12:47 pm IST
இமாச்சலில் மொத்தம் 56,000 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் ஓட்டு செலுத்த வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதோடு 37 வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் நிர்வகித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை செய்துள்ளோம் - இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் காந்தி பேட்டி
Nov 12, 2022, 12:44 pm IST
இமாச்சலில் மொத்தம் 56,000 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக உள்ளனர். இவர்கள் ஓட்டு செலுத்த வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதோடு 37 வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் நிர்வகித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை செய்துள்ளோம் - இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் காந்தி பேட்டி
Nov 12, 2022, 12:35 pm IST
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 7881 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் 157 ஓட்டுச்சாவடிகளை முழுமையாக பெண்கள் மட்டுமே நிர்வகித்து வருகின்றனர். குழந்தைகளுடன் ஓட்டுச்சாவடிக்கு வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளோம். அமைதியான முறையில் தேர்தல் நடக்கிறது என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தகவல்
Nov 12, 2022, 12:15 pm IST
சுரா சட்டசபை தொகுதியில் உள்ள 122வது வாக்குச்சாவடியில் 105 வயது நிரம்பிய நரோ தேவி ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
Nov 12, 2022, 12:01 pm IST
11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சுந்தர்நகர் சட்டசபை தொகுதியில் 23 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
Nov 12, 2022, 11:42 am IST
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 11.82 சதவீத ஓட்டுக்கள் பதிவு
Nov 12, 2022, 11:36 am IST
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான ஆனந்த் சர்மா சிம்லாவில் உள்ள சாய்னிக் ரெஸ்ட் ஹவுஸ் லாங்க்வுட்டில் ஓட்டு செலுத்தினார்
Nov 12, 2022, 11:34 am IST
காலை 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காங்க்ரா தொகுதியில் 4.54 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது.
Nov 12, 2022, 11:34 am IST
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஓட்டளித்தார். பிலாஸ்பூரில் உள்ள விஜயாப்புரா வாக்குச்சாவடியில் ஜேபி நட்டா வாக்களித்தார். அதன்பிறகு ஜேபி நட்டா கூறுகையில், ‛‛இன்று காலை முதல் சாதகமான சூழல் உள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதில் வைராக்கியம் இருப்பதாக நினைக்கிறேன். அதிகளவில் வாக்குப்பதிவாக வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
Nov 12, 2022, 11:28 am IST
இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமால் தனது மகனும் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் உள்பட குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். அனுராக் தாகூர் கூறுகையில், ‛‛தேர்தலை முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் சந்தித்து உள்ளோம். அவரது தலைமையில் மாநிலத்தில் 5 ஆண்டு நல்லாட்சியை கொடுத்து உள்ளோம். இதனால் மீண்டும் ஒருமுறை மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
Nov 12, 2022, 11:01 am IST
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா சிம்லாவில் வாக்களித்தார்.
READ MORE
7:32 PM, 11 Nov
இமாச்சல பிரதேச சட்டசபை பதவிக் காலம் 2023-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதியுடன் முடிவடைகிறது
7:32 PM, 11 Nov
2017-ம் ஆண்டு இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள்: பாஜக 44; காங்கிரஸ் 21; சுயேட்சைகள் 2; சிபிஎம்-1
7:33 PM, 11 Nov
2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 4.73% வாக்கு சாவடிகள் அதிகம்
7:34 PM, 11 Nov
இமாச்சல பிரதேசம் முழுவதும் மொத்தம் 7,881 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
7:34 PM, 11 Nov
80 வயதை கடந்த வாக்காளர்கள் மட்டும் 1.22 லட்சம் பேர்
7:35 PM, 11 Nov
இமாச்சல பிரதேசத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 1,184 பேர்
7:36 PM, 11 Nov
இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
7:37 PM, 11 Nov
இன்றைய தேர்தலில் சுமார் 56 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
7:37 PM, 11 Nov
68 தொகுதிகளில் 412 பேர் வேட்பாளர்களாக போட்டி
7:37 PM, 11 Nov
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடக்கம்
7:37 PM, 11 Nov
இமாச்சல பிரதேசத்தில் இன்று சட்டசபை தேர்தல்
6:26 AM, 12 Nov
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 55 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் இன்று ஓட்டளிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்க உள்ளது. மொத்தம் 7881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
6:47 AM, 12 Nov
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி 789 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 397 அதிபதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
7:25 AM, 12 Nov
68 தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக 67 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் 11,500க்கும் மேற்பட்ட மாநில போலீஸார் என மொத்தம் 30,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
7:59 AM, 12 Nov
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கு இன்னும் சற்று நேரத்தில் ஓட்டுப்பதிவு துவக்கம்
8:03 AM, 12 Nov
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கியது. 7881 வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்ற வாக்காளர்கள் ஆர்வம்
8:25 AM, 12 Nov
தேர்தலையொட்டி முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தனது மனைவி சாதனா, மகள்கள் சந்திரிகா, பிரியங்கா ஆகியோருடன் மாண்டியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம்
8:48 AM, 12 Nov
இமாச்சல பிரதேச மக்கள் தேர்தலில் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். அவர்கள் மாற்றத்தை விரும்பி ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்-பிரதீபா சிங், இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர்
9:01 AM, 12 Nov
இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று புதிய சாதனை படைக்க வேண்டும். இந்த வேளையில் முதல் முறையாக தேர்தலில் வாக்களித்த அனைத்து இளைஞர்களுக்கு சிறப்பான வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன் - பிரதமர் நரேந்திர மோடி ட்விட்
9:24 AM, 12 Nov
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் சீராஜ் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவர் தனது குடும்பத்துடன் வந்து மாண்டியில் உள்ள 44வது வாக்குச்சாவடியில் ஓட்டளித்தார். அதன்பிறகு ஜெய்ராம் தாகூர் கூறுகையில், ‛‛பாஜக அதிக இடங்களை கைப்பற்றி பெரிய வெற்றியை பெரும். தற்போது தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது’’ என்றார்.
9:51 AM, 12 Nov
வலுவான மற்றும் ஊழலற்ற அரசாங்கம் மட்டுமே இமாச்சல பிரதேசத்தை வளர்ச்சியில் முன்னணியில் வைக்க உதவுவதோடு, மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிவகுக்கும். இதனால் இமாச்சல பிரதேசத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளைஞர்கள் இந்த பொன்னான நாளில் வாக்களித்து வலுவான அரசை தேர்வு செய்ய வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்
10:22 AM, 12 Nov
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளில் முதல் ஒரு மணி நேரத்தில் 4 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நிலவரப்படி 4 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
11:01 AM, 12 Nov
இமாச்சல பிரதேசம் பழைய ஓய்வூதிய திட்டத்துக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் வாக்களிக்க வேண்டும். இந்த நல்ல நாளில் பொதுமக்கள் திரண்டு வந்து இமாச்சல பிரதேசத்தில் எதிர்காலத்துக்காக வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் மற்றும் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் வேண்டுகோள்.
11:01 AM, 12 Nov
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா சிம்லாவில் வாக்களித்தார்.
11:28 AM, 12 Nov
இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமால் தனது மகனும் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர் உள்பட குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். அனுராக் தாகூர் கூறுகையில், ‛‛தேர்தலை முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் சந்தித்து உள்ளோம். அவரது தலைமையில் மாநிலத்தில் 5 ஆண்டு நல்லாட்சியை கொடுத்து உள்ளோம். இதனால் மீண்டும் ஒருமுறை மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
11:34 AM, 12 Nov
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஓட்டளித்தார். பிலாஸ்பூரில் உள்ள விஜயாப்புரா வாக்குச்சாவடியில் ஜேபி நட்டா வாக்களித்தார். அதன்பிறகு ஜேபி நட்டா கூறுகையில், ‛‛இன்று காலை முதல் சாதகமான சூழல் உள்ளது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதில் வைராக்கியம் இருப்பதாக நினைக்கிறேன். அதிகளவில் வாக்குப்பதிவாக வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
11:34 AM, 12 Nov
காலை 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காங்க்ரா தொகுதியில் 4.54 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது.
11:36 AM, 12 Nov
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்பியுமான ஆனந்த் சர்மா சிம்லாவில் உள்ள சாய்னிக் ரெஸ்ட் ஹவுஸ் லாங்க்வுட்டில் ஓட்டு செலுத்தினார்
11:42 AM, 12 Nov
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 11.82 சதவீத ஓட்டுக்கள் பதிவு
12:01 PM, 12 Nov
11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சுந்தர்நகர் சட்டசபை தொகுதியில் 23 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
Himachal Pradesh Election 2022 [ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தல் 2022] Polling Live Updates, Latest News and Highlights in Tamil: Check all the Live News updates on the Himachal State Assembly Pradesh Election Polling, Results, Breaking News & Highlights and much more in tamil at Oneindia Tamil.