சபாஷ்! இதுதான் இந்தியா.. அப்பாவின் கடைசி ஆசை.. மசூதி கட்ட நிலம் கொடுத்து உதவிய இந்து சகோதரிகள்
டேராடூன்: நாட்டில் வகுப்புவாத வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்து சகோதிரிகளின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் மத ரீதியான பேச்சுக்களும் மோதல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சிலர், தங்களின் லாபத்திற்காக இதுபோன்ற மத மோதல்களைத் தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில் உத்தரகண்ட் மாநிலத்தில் உயிரிழந்த தங்கள் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், இரண்டு இந்து சகோதரிகள் ₹ 1.5 கோடி மதிப்புள்ள இடத்தை இலவசமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் காஷிபூர். இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் தான் பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. விவசாய தொழில் செய்து வந்த பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி, 20 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இருப்பினும் உயிரிழக்கும் முன்பு, தனது விவசாய நிலத்தில் 2.47 ஏக்கர் நிலத்தை மசூதி விரிவாக்கத்திற்கு நன்கொடையாக வழங்க விரும்புவதாகத் தனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடைசி ஆசை
இருப்பினும், அவர் தனது கடைசி ஆசையைத் தனது குழந்தைகளிடம் தெரிவிக்கும் முன்பு, அவர் எதிர்பாராத விதமாகக் கடந்த ஜனவரி 2003இல் உயிரிழந்தார். டெல்லி மற்றும் மீரட்டில் வசித்து வரும் அவரது இரு மகள்கள் சரோஜ் மற்றும் அனிதா ஆகியோருக்கு தங்கள் தந்தையின் கடைசி ஆசை குறித்து உறவினர்கள் மூலம் சமீபத்தில் தான் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக காஷிபூரில் வசிக்கும் அவர்களது சகோதரர் ராகேஷ் ரஸ்தோகியை தொடர்பு தந்தையின் கடைசி ஆசை குறித்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர்.

ரூ 1.5 கோடி மதிப்புள்ள இடம்
தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற ராகேஷ் ரஸ்தோகியும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த இரு சகோதரிகளும், ₹ 1.5 கோடி மதிப்புள்ள 2.7 ஏக்கர் நிலத்தை மசூதி விரிவாக்கத்திற்கு நன்கொடையாக வழங்கினர். இது தொடர்பாக ராகேஷ் ரஸ்தோகி கூறுகையில், "தந்தையின் கடைசி ஆசைக்கு மதிப்பளிப்பது எங்கள் கடமையாகும். என் சகோதரிகள் அவரது ஆன்மா சாந்தியடையச் செய்யும் ஒன்றைச் செய்திருக்கிறார்கள்" என்றார்.

வகுப்புவாத வன்முறை
மசூதியின் ஈத்கா கமிட்டியின் ஹசின் கான் இது பற்றிக் கூறுகையில்"இரண்டு சகோதரிகளும் மத ஒற்றுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஈத்கா கமிட்டி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவித்தார். நாட்டில் வகுப்புவாத வன்முறை சமீப ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும் வகையிலான இந்த இரண்டு சகோதரிகளின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications