அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், முதல்வர் படம் மட்டும் போதும்.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஊடகங்களில் மத்திய அரசு விளம்பரங்களை வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பதை உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழு பரிந்துரைத்துள்ளது.
தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு விளம்பரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு குழு ஒன்றை நியமித்தது.

ஊடக விளம்பரங்களை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தேசிய நீதித்துறை அகாடமியின் முன்னாள் இயக்குநர் மாதவ மேனன் தலைமையில் லோக்சபா செயலாளர் டி.கே. விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது.
இக்குழு தமது வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:
பிரபலங்களின் பிறந்த நாள், நினைவுநாளுக்கான விளம்பரங்களை முதலில் பட்டியல்படுத்த வேண்டும்.
எந்த அமைச்சகம் சார்பில் மட்டும் விளம்பரம் தரப்பட வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும். இதன் மூலம் வெவ்வேறு அமைச்சகங்கள் ஒரு நிகழ்வுக்காக விளம்பரங்கள் வெளியிடுதல் தவிர்க்கப்படும்.
மத்திய அரசு ஊடகங்களில் தரும் விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் படங்கள் இடம்பெறுதலை தவிர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் இதை தவிர்க்க முடியாத நிலையில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் அல்லது முதல்வர் படம் மட்டுமே இடம்பெற வேண்டும்.
எந்த ஒரு தனிநபரையோ அல்லது கட்சிகளையோ அல்லது அரசுகளையோ முன்னிலைப்படுத்துகிற விளம்பரங்களைத் தரக்கூடாது.
அரசியல் தலைவர்களை புகழ்ந்து விளம்பரங்கள் தரக் கூடாது.
இந்த பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்ற பின்னர் மத்திய அரசு இது தொடர்பில் சட்டம் இயற்றிய பின்னர் இவை நடைமுறைக்கு வரும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications