மாணவிகளுக்கு பாதுகாப்பு: பள்ளி தேர்வு கவுன்சிலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடிதம்
டெல்லி: பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொல்லையில் இருந்துவிடுபட உரிய நடவடிக்கை எடுக்கும்படி, இந்திய பள்ளிகள் சான்று தேர்வு கவுன்சிலுக்கு (CISCE) மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர் பள்ளிக்கு இக்கவுன்சில் கொடுத்துள்ள அங்கீகாரத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளதை குறிப்பிட்டுள்ள ஸ்மிருதி இரானி, இந்த பரிந்துரையின் மீது கவுன்சில் நிலைப்பாடு என்ன என்பதையும் வினவியுள்ளார்.
ஆர்.டி.இ சட்டம் தொடர்பாக இந்தாண்டு மார்ச் 26ம்தேதி மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட நெறிமுறைகளையும் தனது கடிதத்தில் ஸ்மிருதி இரானி நினைவுபடுத்தியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications