ஹூட் ஹூட் பாதிப்பு: விசாகப்பட்டினத்தில் லிட்டர் பால், பெட்ரோல் ரூ.100, முட்டை ரூ.15
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளில் ‘ஹூட் ஹூட்' புயலின் தாக்கத்தால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், பால் ஆகியவை ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டை விலை ரூ.15ஆக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஹூட் ஹூட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதில் விசாகப்பட்டினம் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது 40 சதவீத அரசு, தனி யார் பஸ்கள் நேற்று மதியம் முதல் இயங்கத் தொடங்கின. சாலைகள், நெடுஞ்சாலைகள் சீரமைப்பு பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதனால் விசாகப்பட்டினம் நகருக்கு வெளியே சுமார் 40-50 கி.மீ. தூரம் வரை லாரி, பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சீரமைப்பு பணிகள் தீவிரம்
பல நகர்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம், தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கம்பங்கள், செல்போன் டவர்களை சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

அத்தியாவசியப் பொருட்கள்
எனினும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி கள்ளமார்க்கெட்டில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர் சமூகவிரோதிகள்.

1லிட்டர் ரூ.100
விசாகப்பட்டினத்தில் நேற்று ஒரு லிட்டர் பால் மற்றும் பெட்ரோலின் விலை ரூ. 100 ஆகவும், குடிநீர் கேன் (20 லி) ரூ. 300 ஆகவும் இருந்தது. மேலும் முட்டை - ரூ. 15, டீ - ரூ. 15, காபி - ரூ. 20, இரண்டு பூரி - ரூ. 50, இரண்டு இட்லி - ரூ. 25 என கள்ளச் சந்தையில் விற்பனை நடைபெற்றது.

வாங்கும் மக்கள்
உணவுக்கான தேவை அதிகமிருப்பதால், விலை அதிகமிருந்தாலும் பரவாயில்லை என பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இவற்றை வாங்கிச் சென்றனர். வங்கி ஏ.டி.எம்.களும் இயங்காததால் பணம் எடுக்கவும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

முதல்வர் எச்சரிக்கை
சில இடங்களில் அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலம் வினியோகிக்கப்பட்டது. பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாபரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பேரிடர்
இதனிடையே, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஷாவில் 24 பேர் உயிரிழப்பையும் ஏராளமான சேதத்தையும் ஏற்படுத்திய ஹூட் ஹூட் புயலை, மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications