கணவர் அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மோடியின் மனைவி பேட்டி
அகமதாபாத்: தமது கணவர் அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத் தயார் என்று நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியின் மனைவி ஜஷோடாபென் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜஷோடாபென் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

லோக்சபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த மோடி, முதல் முறையாக எனது பெயரை மனைவி என்று குறிப்பிட்டிருந்தது தொடர்பாக மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக அவருக்கு நன்றியும் தெரிவிக்கிறேன்.
இதற்கு முன்பு அவர் எனது பெயரை குறிப்பிட்டதில்லை. எப்போதும் என்னைப் பற்றி தவறாக பேசியதும் இல்லை. அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.
நான் அவரது மனைவி. எப்போதும் அவரது மனைவியாகவே இருப்பேன். எங்களது விவாகம் ரத்தாகவில்லை. அவ்வகையில், நாங்கள் பிரிந்து விடவில்லை, சேர்ந்தே இருக்கிறோம். நாட்டுக்கு சேவையாற்ற அவர் வீட்டை விட்டு சென்றார். அதனால், நாங்கள் தனியாக உள்ளோம்.
1987-ம் ஆண்டு அவருடன் பேசினேன். நான் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது நானும் அவருடன் சேர்ந்து சிரமப்பட வேண்டாம் என்று அவர் கருதினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர் கேட்டபோது, ‘நான் ஏன் கலந்துக் கொள்ளக் கூடாது?.. அழைப்பு வந்தால், நிச்சயம் செல்வேன்' என்றும் கூறினார்.
தன்னுடன் வந்து தங்கிக் கொள்ளும்படி மோடி அழைத்தால், நீங்கள் போவீர்களா? என்ற கேட்டபோது, சற்றும் தாமதிக்காமல், ‘அவர் கேட்டுக் கொண்டால் போவேன்' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications