Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மீதே தாக்குதலா.. நான் கோழையில்லை.. போராளி.. உத்தர பிரதேசத்தில் கொந்தளித்த மம்தா பானர்ஜி

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: ‛‛நான் கோழை இல்லை... போராளி... என்மீதான தாக்குதல் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை இழப்பதை குறிக்கிறது'' என பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்று 6ம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று ஓட்டுப்பதிவு நடக்கும் 57 தொகுதிகளில் மொத்தம் 676 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் போட்டியில் உள்ளார். அதாவது யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் சட்டசபை தொகுதிக்கும் இன்று தான் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

நான்கு முனை போட்டி

நான்கு முனை போட்டி

உத்தர பிரதேசத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தற்போது மாநிலத்தை ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீட்க அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியும் உத்தர பிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மம்தா பிரசாரம்

மம்தா பிரசாரம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அகிலேஷ் யாதவ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தில் மார்ச் 7ல் நடைபெற உள்ள இறுதிக்கட்ட சட்டசபை தேர்தலையொட்டி வாரணாசி தொகுதியில் இன்று மம்தா பானர்ஜி பிரசாரம் செய்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:

பாஜக ஆட்சியை இழக்கும்

பாஜக ஆட்சியை இழக்கும்

நான் பலமுறை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளேன். என்னை கட்டையால் அடித்ததோடு, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நான் ஒருபோதும் வீழ்ந்தது இல்லை. நான் கோழை இல்லை, போராளி. வாரணாசிக்கு வரும்போது என்மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது ஆட்சியை இழந்து அவர்கள் செல்வதை குறிக்கிறது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் தவித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்'' என குற்றம்சாட்டினார்.

காரணம் என்ன

காரணம் என்ன

முன்னதாக நேற்று மம்தா பானர்ஜி தஸ்வாமித் காட் பகுதியில் நடந்த கங்கை ஆரத்திக்கு சென்றார். அப்போது ஹிந்து யுவ வாகினி அமைப்பினர் அவருக்கு கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைப்பை 20 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறுவியது குறிப்பிடத்தக்கது. இதை தான் குறிப்பிட்டு இன்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி அசோக் தன்வார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது மம்தா காரில் இருந்து வெளியே இறங்கி சாலையில் நிற்க, அருகே ஏரளாமானவர்கள் கோஷமிடும் வகையில் உள்ளது. இதில், ‛‛
இன்று வாரணாசியில் (உ.பி.) சில பாஜகவினர் மம்தா பானர்ஜியின் காரை நிறுத்தி கருப்பு கொடி காட்டினர். காரில் இருந்து அவர் இறங்கவே எதிரே நின்றவர்கள் அருகே செல்ல துணியவில்லை. இதுதான் மம்தாவின் உண்மையான பலம்'' என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+