சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு பாலியல் தொல்லை புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது பிளாக்கில் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய தாத்தா வயதில் இருக்கும் அந்த நீதிபதியை எதிர்த்து தன்னால் போராட முடியாமல் போனதை கோழைத்தனமாக உணர்கிறேன் என்றும் அந்தப் பெண் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து நாடே போராடிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த தொல்லையை தான் சந்தித்தாகவும் அந்த பெண் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர்

கொல்கத்தாவைச் சேர்ந்தவர்

சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் ஆவார்.

ஹோட்டல் ரூமில் வைத்து

ஹோட்டல் ரூமில் வைத்து

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து தன்னிடம் அத்துமீறி அந்த நீதிபதி நடந்து கொண்டதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில்தான் அந்த நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றதாகவும் அப்பெண் தெரிவிததுள்ளார்.

பிளாக்கில் வேதனை

பிளாக்கில் வேதனை

இதுகுறித்து தனது பிளாக்கில் அந்தப் பெண் வழக்கறிஞர் எழுதியிருப்பதாவது... கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் எனது படிப்பின் இன்டர்ன்ஷிப்புக்காக டெல்லியில் தங்கியிருந்தேன். அப்போது டெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துப் போராடிக் கொண்டிருந்தது.

மன ரீதியாக செக்ஸ் துன்புறுத்தல்

மன ரீதியாக செக்ஸ் துன்புறுத்தல்

அப்போது அந்த நீதிபதியை நான் சந்தித்தேன். அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றவர். மிகவும் மதிக்கப்படும் நீதிபதியும் கூட. எனது இறுதி செமஸ்டரின்போது அவரிடம்தான் நான் பயிற்சிக்காக சேர்ந்திருந்தேன். என்னிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டார். உடல் ரீதியாக அல்ல, ஆனால் வரம்பு மீறி நடந்து கொண்டார். எனக்கு தாத்தா வயதில் இருப்பவர் அவர்.

விவரம் சொல்ல விரும்பவில்லை

விவரம் சொல்ல விரும்பவில்லை

முழு விவரத்தையும் சொல்ல நான் விரும்பவில்ல. அந்த அறையிலிருந்து எப்படியோ நான் வந்து விட்டேன். ஆனால் என்னை அந்த துயரம் துரத்தியபடி உள்ளது.

மேலும் 3 பேரிடம் அத்துமீறியவர்

மேலும் 3 பேரிடம் அத்துமீறியவர்

இந்த நீதிபதி ஏற்கனவே 3 பேரிடம் அத்துமீறியவர் என்று நான் கேள்விப்பட்டேன். அதேபோல மேலும் சில நீதிபதிகளிடம் தாங்கள் இதேபோன்ற துன்புறுத்தலை சந்தித்தாக என்னிடம்4 பெண்கள் கூறியுள்ளனர்.

துணிச்சல் வர வேண்டும்

துணிச்சல் வர வேண்டும்

என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் சந்தித்த துயரங்களை வெளியில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் துணிச்சலுடன் இதைக் கூறுகிறேன்.

அப்போது என்னால் முடியவில்லை

அப்போது என்னால் முடியவில்லை

ஆனால் அப்போது என்னால் இதை வெளிப்படுத்த முடியவில்லை. அவருக்கு எதிராக என்னால் சட்ட ரீதியாகக் கூட போராட முடியவில்லை என்பதை நினைக்கும்போது கோழைத்தனமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார் அப்பெண்.

இருப்பினும் இதுதொடர்பாக இதுவரை இப்பெண் வழக்கறிஞர் புகார் எதையும் தரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+