சஞ்சய் தத் விடுதலையில் விதிமீறலா? மீண்டும் ஜெயிலுக்கே அனுப்பிடுறோம்- மகாராஷ்டிரா அரசு
தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டதில் விதிமீறல் இருந்தால் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப ஆட்சேபணை இல்லை என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
மும்பை : நடிகர் சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டதில் விதிமீறல் இருந்தால் அவரை மீண்டும் சிறைக்கே அனுப்புவதில் ஆட்சேபணை இல்லை என்று மகாராஷ்டிரா அரசு மும்பை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் சோதனையிட்டதில் ஏ.கே. 56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. எனினும் தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தது.
ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் தத், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் ஏரவாடா சிறையில் 2013, மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை பரோலில் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, தண்டனை முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, எந்த நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார் என்ற புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகர் சஞ்சய் தத்திவிற்கு விதிகளை மீறி விடுதலை அளிக்கப்பட்டதாகக் கருதினால் அவரை மீண்டும் சிறைக்கு அனுப்புவதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறியுள்ளார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் 5 ஆண்டுகளில் சஞ்சய் தத்திற்கு எத்தனை நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சஞ்சய் தத்திற்கு 4 மாதங்கள் பரோலும், விடுமுறையாக ஒரு மாதம் 14 நாட்களும் அளிக்கப்பட்டதாகக் கூறியிருந்தது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications