ஓகி புயல் எதிரொலி... தென் தமிழகம், கேரளாவிற்கு இந்திய வானிலை மையம் 'ஆரஞ்ச்' அலெர்ட்!
ஓகி புயல் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளா பலத்த சேதத்தை காணும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆரஞ்ச் அலெர்ட்டை இந்திய வானிலை மையம் அளித்துள்ளது.
Recommended Video

டெல்லி: ஓகி புயல் காரணமாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால் தென் தமிழகம் மற்றும் கேரள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 8.30 மணியளவில் ஓகி புயலாக மாறியது. இது இலங்கை மற்றும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஒட்டியுள்ள கடற்பகுதியில் நீடிக்கிறது. ஓகி புயலானது மேலும் மேற்கை நோக்கி நகரும் என்று தெரிகிறது, இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த சூறை காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துளள்து.
ஓகி புயல் காரணமாக தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போன்று காற்றின் வேகமும் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்துடன் காணப்படும்
கடல் மட்டத்தை பொறுத்த வரை அலைகள் சீற்றத்துடன் எழும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த பகுதிகளை பாதிக்கும்?
தெற்கு கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கிஇ கொல்லம், பத்தனம் திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்திக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. வீடுகள், சாலைகள் சேதம் அடைவதோடு, விளைபயிர்கள், வாழை, பப்பாளி மரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா பகுதியை ஒட்டியுள்ள கடலில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓகி புயல் குறித்த முன் எச்சரிக்கை செய்தியில் இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் மெசேஜ் என்று குறிப்பிட்டுள்ளது.

தயாராக இருப்பதற்காக
வானிலை முன் எச்சரிக்கைகளில் 3 வித நிற எச்சரிக்கைகள் தரப்படுகின்றன. மஞ்சள் நிற எச்சரிக்கை என்றால் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆரஞ்ச் நிற எச்சரிக்கை என்றால் தயார் நிலையில் இருக்க வேண்டும். சிவப்பு நிற எச்சரிக்கை என்றால் மழை, புயலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications