எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்த முடிவு - இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்தியா சீனா எல்லை பகுதியில் விவகாரங்களை முறையாக தீர்ப்பது, அமைதியை கூட்டாக பாதுகாப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
லடாக்: எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்தப்படும் என இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிட வேண்டும் எனவும்,
நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் எனவும் இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை மூலமாகவே எல்லைப் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக இருநாடுகளும் கூறி வருகின்றன. இதுவரை இந்தியா, சீனா ராணுவ தளபதிகள் இடையே ஐந்து கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சீன எல்லைக்குள் இருக்கும் மோல்டோ பகுதியில் காலை 9 மணிக்கு இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய ராணுவ ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்தியக் குழுவும், சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் லின் லியு தலைமையிலான இந்திய குழுவும் பல மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

6ஆம் கட்ட பேச்சுவார்த்தை
பல மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணித்து அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான முக்கியமான விசயங்களை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பரிமாறி கொண்டனர்.

கூட்டறிக்கை வெளியீடு
பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளன.
இந்தியா, சீனா தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை அமல்படுத்துவது என ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் தொலைதொடர்பினை வலுப்படுத்துதல், தவறான புரிதல்களை தவிர்க்க வேண்டும்.

எல்லை பதற்றம் தணிக்க நடவடிக்கை
எல்லையை நோக்கி கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதனை நிறுத்தி கொள்ள வேண்டும். ஒரு தலைப்பட்சம் ஆக எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிட வேண்டும் மற்றும் நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமைதி பாதுகாப்பு
இதேபோன்று இரு தரப்பும், 7வது கட்ட ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் ஒன்றை விரைவில் நடத்தவும் ஒப்பு கொண்டுள்ளன. எல்லை பகுதியில் விவகாரங்களை முறையாக தீர்ப்பது, அமைதியை கூட்டாக பாதுகாப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications