இந்தியா - சீனா எல்லை பதற்றம்: இரு நாட்டு ராணுவத்தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை
இந்தியா - சீனா நாடுகளிடையே எல்லையில் நடைபெறும் பதற்றத்தை தணிக்க விரைவில் இரு நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக்: இந்தியா - சீனா நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் நேற்று லடாக்கில் உள்ள சுசூலில் பிரிகேட் ரேங்க் வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் ராணுவ தளபதிகள் இடையேயான பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியா-சீனா படைகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இரு தரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

லடாக் பிரச்சனை குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாஸ்கோவில் இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில் எல்லையில் தற்போதுள்ள சூழ்நிலை இரு தரப்புக்கும் உகந்ததாக இல்லையென்பதால் இரு தரப்பு எல்லைப் படைகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
விரைவில் படைகளை மீட்டுக் கொண்டு, இருதரப்பினரும் முறையான இடைவெளி கடைப்பிடித்து பதற்றத்தைத் தணிக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளைப் பின்பற்றி எல்லைப் பிரச்சினையில் கருத்தொற்றுமை கொண்டு இந்திய - சீன உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
வேறுபாடுகள் தகராறுகளாக மாறாமல் தடுக்க வேண்டும். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு செயலிலும் இருதரப்பினரும் ஈடுபடக்கூடாது என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் படைகளை வாபஸ் வாங்கவில்லை. இது பெறும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வெள்ளிக்கிழமையன்று இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ, விமான மற்றும் கடற்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினர். அஜித் தோவல் பிரதமர் மோடியை சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து விளக்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் லடாக்கில் உள்ள சுசூலில் பிரிகேட் ரேங்க் வீரர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை காலை 11 மணியில் இருந்து 3 மணி வரை நடைபெற்றும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இந்தியா - சீனா நாடுகளின் ராணுவ தளபதிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் பதற்றம் தணியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications