மாஸ்டர் ஸ்ட்ரோக்.. சீனாவுக்கு செக் வைத்த இந்தியா.. பிரம்மபுத்திரா குறுக்கே பிரமாண்ட அணை.. பின்னணி?
இட்டாநகர்: சீனாவை கடந்து இந்திய எல்லைக்குள் நுழையும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா பிரமாண்ட அணையை கட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவும் அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணையை வேகமாக கட்ட தொடங்கியுள்ளது.
இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தற்போது வரை தங்களுடையதாக கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த சர்ச்சைகுரிய பகுதிகளில் சீனா தனது கட்டுமானங்களை விரிவுப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச எல்லையையொட்டியுள்ள பகுதியில் சுமார் 67 கி.மீ தொலைவுக்கு சீனா சாலையை அமைத்தது.
ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கி 2014ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளில் இந்த பிரமாண்டமான சாலையை சீனா கட்டி முடித்திருக்கிறது. 67.22 கி.மீ தொலைவு கொண்ட இந்த நெடுஞ்சாலையானது சீனாவின் நைஞ்சியில் உள்ள பேட் டவுன்ஷிப்பை, மெடோக் கவுண்டியில் உள்ள பைபங் டவுன்ஷிப்புடன் இணைக்கிறது. இந்த கட்டுமான பணிகளை இந்தியா கடுமையாக எதிர்த்து வந்த போதிலும் சீனா விடாபிடியாக சாலையை அமைத்து முடித்துவிட்டது.

அடுத்த நகர்வு
இதனையடுத்து தற்போது அடுத்த நகர்வுக்கு சீனா சென்றிருக்கிறது. அதாவது, பிரம்மபுத்திரா நதி உருவாகும் சீன எல்லையில் அமைந்துள்ள திபெத் பகுதியில் சுமார் 60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் 'பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன்' இந்த கட்டுமாணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போல பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவது முதல்முறையல்ல. இதற்கு முன்னரே சுமார் ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தின் 'ஜாம்' நீர்மின் நிலையத்தை சீனா கடந்த 2015ம் ஆண்டு கட்டி முடித்து பயண்பாட்டுக்கு கொண்டு வந்தது.

அணை
இந்நிலையில் தற்போது இரண்டாவது அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும். கோடைக்காலங்களில் நீருக்கு பஞ்சமும் மழைக்காலங்களில் அதீத வெள்ளமும் ஏற்படும். எனவே இதனை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதியிலிருந்து சுமார் 30% குடிநீரும், 40% மின்சாரமும் கிடைக்கிறது. ஆனால் இந்த நதியின் 50% பரப்பு சீனாவில்தான் இருக்கிறது. எனவே சீனா தன்னுடைய இஷ்டத்திற்கு முடிவுகளை எடுத்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவால் இந்தியா மட்டுமல்லாது வங்கதேசமும் பாதிப்பை சந்திக்கும்.

இந்தியாவின் திட்டம்
எனவே இதனை தடுக்க இந்தியா 'லோயர் சுபன்சிரி திட்டத்தை' கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அப்பர் சுபன்சிரியில் 11,000 மெகாவாட் (மெகாவாட்) மின்சாரம் தயாரிக்கும் விதமாக அணை கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த அணை கட்டப்பட்டால் சீனா திறந்துவிடும் நீரால் ஏற்படும் வெள்ளத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு குறிப்பிட்ட அளவில் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும். இதன் மூலம் அம்மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று சொல்லப்படுகிறது.

தண்ணீர் பிரச்சினை
மேலும் இந்த அணை அசாம் மாநிலத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த கட்டுமான பணிகளை சீக்கிரமாக முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையையும் சீன ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications