ரயில் விபத்தில் துண்டான கொச்சி இளைஞரின் இரு கைகளையும் ஆபரேஷன் மூலம் பொருத்தி சாதனை!
கொச்சி: ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த 30 வயதான மனு என்பவருக்கு, சாலை விபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் கைகள் ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டன.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமநையில் நடைபெற்ற ஆபரேஷன் நடந்தது. 16 மணி நேரம் நடந்தது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவும், கைகள் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து, நோயால் பாதிப்பு ஏற்பட்டு மூளைச் சாவு நிலையை அடைந்தோரின் உறுப்புகளை தானம் செய்யும் விழிப்புணர்வு சமீப காலமாக பிரபலமடைகிறது.
இனி பிழைக்கவே மாட்டார் என்ற நிலையில் பெற்றோர், உறவினர்கள் சம்மதத்தில், அந்நோயாளியின் உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகின்றன. கண், இருதயம், சிறுநீரகம், நுரையீரல், எலும்பு போன்ற உறுப்புகளையே தானம் செய்யும் போக்கு உள்ளது. இதேபோல "கை'யையும் தானம் செய்யலாம். உலக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், ப்ரான்ஸ் நாடுகளில் இதுவரை 110 பேருக்கு கை மாற்று ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல்முறையாக கொச்சியில் கை மாற்று ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. அம்ரிதா மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவின் தலைமைமருத்துவர் டாக்டர் சுப்ரமணிய ஐயர் தலைமையில் நடைபெற்ற ஆபரேஷனில் 20 டாக்டர்கள் பங்கேற்றனர். 16 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆபரேசனில் ரயில் விபத்தில் இழந்த இரண்டு கைகளையும் திரும்ப பெற்றார் மனு.
இந்தியாவில் முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆபரேசன் மூலம் கைகளை பெற்ற மனு என்பவரை செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்து டாக்டர் சுப்ரமணிய ஐயர் பேசினார்.
பிறவியிலோ, வாகன விபத்திலோ, இயந்திரத்தில் சிக்குவதாலோ மணிக்கட்டு பகுதியை ஒருவர் இழந்துவிட்டால் எந்த வேலையையும் செய்ய இயலாது. அவருக்கு "ரி பிளான்டேஷன்' என்ற முறையில் கையை பொருத்தலாம். இதற்கு துண்டான கையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஐஸ் பெட்டிக்குள் வைத்து கொண்டு வரவேண்டும். மற்றொன்று "டிரான்ஸ் பிளான்டேஷன்' என்ற முறையில், கையை தானமாக பெற்றும் பொருத்த முடியும்.
இதற்கு "மைக்ரோ சர்ஜரி' என்ற தொழில்நுட்பம் உதவுகிறது. ரத்தம், சிறுநீரகம் போல "கை' தானமாக கிடைத்தால் போதும். மூளைச் சாவு அடைந்தவரின் கையை எடுத்து, தேவைப்படுவோருக்கு பொருத்துவதன் மூலம், அவருக்கு "புதிய கை' கிடைக்கிறது.
"மைக்ரோ சர்ஜரி' என்பது நுணுக்கமான அறுவை சிகிச்சை. நுண்ணிய ரத்தநாளங்களை மைக்ரோஸ் கோப் மூலம் பலமடங்கு பெரிதாக்கி பார்த்து, அவற்றை இணைப்பது. இதன் மூலம், சாதாரணமாக பொருத்துவதைவிட, புதிய உணர்வு, விரல்கள் இயக்கம் போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் கையை இழந்தவர்கள் பெரிதும் பயனடைவர் என்றார் டாக்டர்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை ஆபரேசன் நடைபெற்றது. இதுநாள்வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த மனுவிற்கு ஆபரேசன் செய்த கைகளில் ரத்த ஓட்டம் அதிகரித்தது. மாதந்தோறும் இவரது கைகள் பரிசோதனை செய்யப்படும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான மொத்த செலவையும் மாதா அமிர்தானந்தமாயி அளித்துள்ளார் என்றும் டாக்டர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications