தொட்டுவிடும் தொலைவில் டோக்லா பீடபூமி-எந்த நேரத்திலும் சீனா தாக்கும்- போர் பீதியில் எல்லை கிராமம்!
எந்த நேரத்திலும் சீனாவுடனான யுத்தம் வெடிக்கும் நிலையில் உச்சகட்ட போர் பீதியில் இருக்கிறது நாட்டின் எல்லை கிராமமான குப்புப்.
காங்டாங்: போர் மேகம் சூழ்ந்திருக்கும் டோக்லா பீடபூமியை தொட்டு விடும் தொலைவில் இருக்கும் சிக்கிம் எல்லை கிராமமான குப்புப் மக்கள் கடந்த ஒரு மாதமாக உச்சகட்ட பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இந்தியா, பூடான், சீனா ஆக்கிரமித்துள்ள திபெத் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது பூடானின் டோக்லா பீடபூமி. சிக்கிம் தலைநகர் காங்டாங்கில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குப்புப் கிராமம்.
இதுதான் நாட்டின் சிக்கிம் எல்லையில் உள்ள கடைசி கிராமம். இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில்தான் போர் பதற்றம் நிலவும் டோக்லா பீடபூமி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு திசையில் நாதுலா எல்லை இருக்கிறது.
எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என பெரும் பீதியில் இருக்கின்றனர் குப்புப்வாசிகள். வெளிநபர்கள் யாரிடமும் எதுவும் பேசக் கூடாது என அந்த மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் கண்காணிப்பு
பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே தயக்கம் காட்டுகின்றனர். இந்த கிராமத்தின் எல்லையில் ஒரு போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் 'எச்சரிக்கை: சீனாவின் கண்காணிப்பு தொடங்குகிறது" என எழுதப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் தடுப்பு
அத்துடன் குப்புப் கிராமத்துக்கு பத்திரிகையாளர்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தின் வழியாக சீனாவின் சம்பி பள்ளத்தாக்குக்கு இந்தியாவில் இருந்து நாள்தோறும் 100க்கும் அதிகமான சரக்கு வாகனங்கள் செல்லும்.

போர் பீதி தெரிகிறது
கடந்த ஒரு மாதத்தில் இந்த எணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். குப்புப் கிராம மக்கள் போர் பீதியில் உறைந்து கிடப்பதாகவே அங்கு சென்று பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

பாடம் கற்பிக்கனும்
சீனா மிக மோசமாக நடந்து கொண்டு வருவதால் சரியான பாடம கற்பிக்க வேண்டும் என்பதுதான் குப்புப்வாசிகளின் விருப்பமும் கூட.. இத்தனைக்கும் 1962 யுத்த ரணங்களை அனுபவித்தவர்கள் இந்த குப்புப்வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications