ஈராக்கில் சிக்கியுள்ள பிற இந்தியர்களையும் மீட்க முழு முயற்சி: உயர் அதிகாரி உறுதி
டெல்லி: ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார்.
ஈராக்கில் இந்திய செவிலியர்கள் 46 பேர் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: நர்சுகளை காப்பாற்ற ஈராக்கிற்கு உள்ளேயும், வெளியேயும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்.
இதன் விளைவாக, தங்களது விருப்பத்துக்கு விரோதமாக கடத்தப்பட்ட இந்திய நர்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துவர இந்திய விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஈராக் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இணைச் செயலாளர் மட்டத்திலான அதிகாரியும் உடன் இருப்பார். நாளை காலை கொச்சியில் நர்சுகளை இறக்கிவிடும் அந்த விமானம் தேவைப்பட்டால் டெல்லி வரும். இதே விமானத்தில் கிர்குக் பகுதியில் சிக்கியிருந்த 70 இந்தியர்களும் தாயகம் திரும்புகிறார்கள்.
ஈராக்கிலுள்ள பிற இந்தியர்களையும் தாயகம் கொண்டுவர அனைத்துவகையான முயற்சிகளையும் இந்திய அரசாங்கம் செய்து வருகிறது. எனவே அரசை நம்புங்கள். இக்கட்டான இந்த தருணத்தில் நாம் ஒருவருக்கொருவர் அரவணைப்பாக இருக்க வேண்டுமே தவிர, எதிரும் புதிருமாக மாறிவிடக்கூடாது. அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும்வரை இந்திய அரசு திருப்திப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications