மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய கப்பற்படையின் ‘ருக்மணி’...

கடந்த சனிக்கிழமையன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.
அந்த விமானத்தில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் பயணம் செய்தனர். முதலில் அவ்விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், விமானத்தின் பாகங்கள் எதுவும் சிக்காத நிலையில் விமானத்தில் போலி மற்றும் திருட்டு பாஸ்போர்ட்டில் நான்கு பேர் பயணம் செய்தது அம்பலமானது.
அதைத் தொடர்ந்து மாயமான விமானம் கடத்தப் பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் செல்போன் தொடர்ந்து இயங்குவதாகவும், அவ்விமானம் மாயமாவதற்கு முன்னர் மலாக்கா ஜலசந்தி அருகே மாயமானதும் நேற்று தெரிய வந்தது.
இதையடுத்து மலேசியாவின் மேற்கு கடற்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையும் விமான மீட்பு பணியில் இணைந்துள்ளது.
காணாமல் போன விமானம் குறித்த தடயங்களை சேகரிக்க 2013ல் இயக்கத்திற்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ருக்மினி என்ற ஜிசாட்-7 செயற்கைக்கோள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுடன் இந்திய கடற்படையும் ஒருங்கிணைந்து கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில், கடற்சட்ட விதிகளின்படி இந்திய கப்பல்கள் அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications