ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்காக ஆன்லைனில் 'இன்டர்வியூ' நடத்தும் கர்நாடக வாலிபர்!
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பில் கர்நாடகாவை சேர்ந்த தீவிரவாதி அப்துல் காதர் சுல்தான் அர்மர் முக்கிய பங்காற்றி வருவதாக கூறுகிறது உளவுத்துறை.
அல்கொய்தாவிடம் பயிற்சி பெற்ற இவர் தற்போது வளைகுடா நாடுகளில் முகாமிட்டு இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

யாசின் பத்கல் கைது
கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம், பத்கல் பகுதியை சேர்ந்தவரும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய புள்ளியுமான, யாசின் பத்கல் கடந்த ஆண்டு இந்திய உளவு துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அர்மர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அல்கொய்தாவிடம் ஆயுத பயிற்சி
அன்வர் பத்கல், சாபி அர்மர், ஹுசைன் பர்கான் முகமது, சலிம், அபீஸ் மோடா ஆகியோருடன் காதர் அர்மரும் சேர்ந்துதான் வடக்கு வசிரிஸ்டான் பகுதியில் அல்கொய்தாவிடம் பயிற்சி பெற்றதாக யாசின் தெரிவித்துள்ளார். இந்த காதர் அர்மரும் பத்கல் பகுதியை சேர்ந்தவர்தான்.

முஜாகிதீனை விட்டு விலகல்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அணைப்பு பெரும் எழுச்சியோடு வெளிப்பட்டபோது, இந்தியன் முஜாகிதீன் அமைப்பு அதோடு சேர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபட முடிவு செய்தது. அப்போதுதான் அர்மர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் அதிக நெருக்கம் காண்பிக்க ஆரம்பித்துள்ளார். இந்தியன் முஜாகிதீனைவிட்டுவிட்டு ஐஎஸ்ஐஎஸ்யில் தீவிரமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

முக்கிய தீவிரவாதி
இதையடுத்து வளைகுடா நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையில் அர்மர் இறங்கினார். இதனிடையே அன்சார்-உல்-தவாகித் என்ற தீவிரவாத அமைப்பை தனியாக உருவாக்கிய ஐஎஸ்ஐஎஸ், அதன் தலைவராக அர்மரை நியமித்தது. இந்த தகவல் வீடியோ மூலமாக உறுதியும் செய்யப்பட்டது. அப்போதுதான் அர்மரின் முக்கியத்துவத்தை இந்திய பாதுகாப்பு துறை கவனிக்க ஆரம்பித்தது.

பேஸ்புக்கை பயன்படுத்தி ஆள் சேர்ப்பு
அர்மர் ஒரு மக்கள்தொடர்பு அதிகாரியை போல ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆள் சேர்த்துவருகிறார். இதற்காக பேஸ்புக்கில் பல பெயர்களில் கணக்குகளை துவங்கி ஐஎஸ்ஐஎஸ்க்காக இந்தியாவில் இருந்து ஆள்பிடித்து வருகிறார். ராஜஸ்தானை சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்துக்கு செல்ல ஆர்வம் காண்பித்தபோதும் ஆன்லைனிலேயே அர்மர் நேர்முக தேர்வை நடத்தியுள்ளார். தனக்கு திருப்தி ஏற்பட்ட பிறகுதான் அவர்களை வளைகுடா வரச்சொல்லியுள்ளார்.

கண்காணிப்பு தீவிரம்
அர்மருக்கு முக்கிய பொறுப்பை அளித்துள்ளதனஅ மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியா மீது கண் வைத்துள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே அர்மர் மீது இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகளும் கண் வைத்துள்ளன. எந்த நேரத்திலும் அவரை பிடித்துவிடுவோம் என்று உறுதியளிக்கிறார்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications