விண்ணில் பாய்ந்தது பிஎஸ்சிஎல்வி - சி40.. 100வது செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை!
இஸ்ரோவால் இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூர்: இஸ்ரோவால் இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-40 மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
உலகில் இருக்கும் பல நாடுகளின் செயற்கைக்கோள் தற்போது இஸ்ரோ அமைப்பின் மூலம் ஏவப்படுகிறது. அந்த அளவிற்கு நாம் விண்வெளி துறையில் முன்னேறி இருக்கிறோம்.

இந்தநிலையில் இன்று பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்து இருக்கிறது. இந்த ராக்கெட் கார்டோசாட் -2 செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்று இருக்கிறது. இது இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஆகும்.
இதன் எடை 710 கிலோ ஆகும். இதில் நிறைய நேனோ மற்றும் மைக்ரோ செயற்கைக்கோள்கள் இருக்கிறது. அனைத்து செயற்கைக்கோளையும் சேர்த்து இதன் மொத்த எடை 1,323 கிலோ ஆகும்.
சரியாக இன்று காலை 9:28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-40 ஏவப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று அதிகாலையே துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டில் மூலம் கனடா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது. மொத்தமாக 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு உள்ளது.
பூமியின் இயற்கை வளங்களை கண்காணிப்பதற்காக கார்டோசாட் -2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் இடம்பிடித்து இருக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications