சந்திராயன்-2 ரெடி.. இந்த வருடம் விண்ணில் ஏவப்படும்.. அடுத்த இன்னிங்க்ஸுக்கு தயாரான இஸ்ரோ!
சந்திராயன்-2 இந்த வருடம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: சந்திராயன்-2 இந்த வருடம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் நிலவில் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய இஸ்ரோ அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தின் பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும்.இது நிறைய எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது நிலவு ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இஸ்ரோ நிலவிற்கு மனிதனை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.

சந்திராயன்-1 ஆராய்ச்சி
நிலவில் ஆராய்ச்சி செய்ய இந்தியா சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன்-1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்தி சாதனை செய்தது. மிகவும் குறைந்த செலவில், அறிவியல் கணிப்புகளை வைத்து மட்டுமே சந்திராயன்-1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்ட்டது.

சந்திராயன்-2 ஆராய்ச்சி
தற்போது நிலவுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் விண்கலம் மட்டும் இல்லாமல் சிறிய அளவில் ரோபோ போன்ற 'ரோவர்' ஒன்று அனுப்பப்பட இருக்கிறது. சந்திராயன்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

செலவு ஆனது
இதை உருவாக்க மொத்தமாக 800 கோடி வரை செலவு ஆகி இருக்கிறது. சென்ற வருடம் முழுக்க இஸ்ரோ இதன் தயாரிப்பு பணியில்தான் ஈடுப்பட்டு இருந்தது. அதே சமயத்தில் 104 சாட்டிலைட் தங்கிய விண்கலம் அனுப்பியது என உதிரி சாதனைகளும் இந்தியா செய்தது.

எப்போது ஏவப்படும்
இந்த சந்திராயன் 2 ஏப்ரல் இறுதியில் ஏவப்படும் என்று அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்போது கால நிலை சரியாக இருக்காது என்பதால் அக்டோபர் மாதம் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து இருக்கிறார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications