For Daily Alerts
Just In
எல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.. ரூபா இடமாற்றம் பற்றி சீறிய சித்தராமையா
பெங்களூர்: டிஐஜி ரூபாவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டது துறை ரீதியான நடவடிக்கை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறைத்துறை ரூபா மாற்றம் குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், சிறை முறைகேடு பற்றிய விசாரணை நடுநிலையாக நடைபெறவே ரூபா மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
முதல்வர் சித்தராமையா, கூறுகையில், அனைத்தையும் ஊடகங்களிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமான நிர்வாகரீதியான நடவடிக்கையே. சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை டிஐஜி ரூபா அம்பலப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
It is an administrative process,it is not necessary to disclose everything to the media, says Karnataka CM Siddaramaiah on cop D.Roopa's transfer.
Story first published: Monday, July 17, 2017, 15:08 [IST]