நான் பார்த்தேன்.. அருண் ஜெட்லியும், விஜய் மல்லையாவும் 15 நிமிஷம் பேசுனாங்க.. 'ஐ விட்னஸ்' அதிரடி
Recommended Video

டெல்லி: அருண் ஜேட்லியை, விஜய் மல்லையா சந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் ஒருவர் நேரில் பார்த்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி மேலும் கூறியதாவது: மல்லையாவை சந்திக்கவில்லை என்று அருண் ஜேட்லி பொய் சொல்கிறார். இருவரும் சந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் பி.எல்.புனியா பார்த்துள்ளார். அது 15-20 நிமிட நேர சந்திப்பு. அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அருண் ஜெட்லி விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

கிரிமினலுடன் நிதி அமைச்சர் ஆலோசனை செய்தது ஏன், என்ன விவாதிக்கப்பட்டது? ஏன் சிபிஐயிடமோ, போலீசிடமோ தெரிவிக்கவில்லை. அப்படியானால், அங்கே ஒரு டீல் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி., பி.எல்.புனியா நிருபர்களிடம் கூறுகையில், 2016ம் ஆண்டு மார்ச் மாதம், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி பேசிக்கொண்டிருந்தனர். நானும் அந்த பகுதியில் இருந்தேன். ஒரு மூலையில் இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். சுமார் ஐன்தாறு நிமிடங்கள் பிறகு, அவர்கள் அமர்ந்தபடி பேசினர். நான் தவறாக கூறியிருந்தால் சிசிடிவி காட்சிகளை செக் செய்து பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The Finance Minister has colluded in a criminal running away from the country: Rahul Gandhi #VijayMallya pic.twitter.com/pPA6wqajzl
— ANI (@ANI) September 13, 2018
இந்த சந்திப்புக்கு பிறகே மல்லையா இங்கிலாந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா லண்டனில் நிருபர்களிடம் கூறினார். இதை அருண் ஜெட்லி மறுத்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications